அக்‌ஷரா கேப்டன் ஆகலாமா?.. மனசுல இருந்த காரணத்தை போட்டு உடைத்த பாவனி! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 5வது சீசனில் தற்போது இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிக எடை கொண்ட பஞ்சுகளை அதிகமாக சேர்க்கக் கூடிய போட்டியாளர் மற்ற போட்டியாளர்களால் ஏகமனதாக பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவ்வாறு அக்ஷரா குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கேட்கப்பட்டது. அப்போது, “அக்‌ஷரா கேப்டன் ஆகலாமா?” என பாவனியின் கருத்து குறித்து கேட்டபோது,  “அக்‌ஷரா இதுவரை மற்றவர்கள் கேப்டன் ஆவது குறித்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார். எனவே இம்முறை அவர் கேப்டனாக வேண்டும். அவரது கேப்டன்ஷிப்பை மற்றவர்கள் பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ராஜூவை பாவனி இந்த வாரம் நாமினேட் செய்துள்ளார். ஐக்கி மற்றும் இமான் அண்ணாச்சி, பாவனியை வெளியேற்றச் சொல்லி நாமினேட் செய்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Pavani opens up over akshara captaincy cotton task

People looking for online information on BiggBossTamil BiggBossTamil5 BB BiggBoss4 PromoBiggBossSeason5 BB5 BiggBoss VijayTV VijayTelevision StarVijayTV StarVijayTamilTV RedefiningEntertainment BiggBoss BiggBossTamil KH Kamal KamalHaasan UniversalHero Eviction Nomination, Pavani, Priyanka, Raju, Thamarai will find this news story useful.