சென்னையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பரபரப்பு திருட்டு சம்பவம்.. என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பார்வதி நாயர் வீட்டு திருட்டு சம்பவ விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியாகி உள்ளது

Advertising
>
Advertising

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட  விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என நடிகை பார்வதி நாயர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Parvati Nair Latest Statement on Chennai House Burgled

People looking for online information on Actress Parvati Nair, Parvati Nair will find this news story useful.