'உடுமலை' கெளசல்யாவின் புதிய கடை.. திறந்து வைத்த பிரபல முன்னணி ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சமூக செயற்பாட்டாளர் கௌசல்யா சங்கரின் சலூன் கடையை பிரபல முன்னணி நடிகை திறந்து வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் 'KGF' யாஷ் தாடியை இழுத்து விளையாடிய குழந்தை.. ரசிகர்களை கவரும் சூப்பர் CUTE வீடியோ!

பழனியை சேர்ந்த கெளசல்யா, கல்லூரியில் சக மாணவரான உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற  இளைஞரை காதலித்து 2016-ல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். 

பினனர் கடந்த 2016 ம் ஆண்டு சங்கர்  படுகொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக கௌசல்யாவின் பெற்றோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

இச்சூழலில்,மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், ஊட்டி குன்னூர் வெல்லிங்டன் கன்டோன்மென்ட்டில் கௌசல்யாவுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கௌசல்யா ராணுவ பணியில் இருந்து விலகி, "ழ" சலூன் எனும் நிறுவனத்தை கோயம்புத்தூரில் உள்ள வெள்ளலூரில் துவங்கி உள்ளார்.

இந்நிகழ்வில் பிரபல முன்னணி நடிகை பார்வதி கலந்து கொண்டு சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் நடிகை பார்வதி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "வெள்ளலூரில் கௌசல்யாவின் ‘ழ ஃபேமிலி சலூன்’ தொடக்க விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ளவர்களும் அல்லது அந்த வழியாகச் செல்பவர்களும் அவரது சலூனுக்கு சென்று அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என பார்வதி பதிவிட்டுள்ளார்

Also Read | நடிகர் அஜித்தின் 'ஆரம்பம்' & 'துணிவு' லுக்.. வைரலாகும் விக்னேஷ் சிவன் பகிர்ந்த PHOTO!

Parvathy Thiruvothu at Kowsalya Zha Salon in Vellalore

People looking for online information on Kowsalya Zha Salon, Parvathy Thiruvothu, Vellalore will find this news story useful.