"பிளான் பண்ணி பண்ணனும்".. "காண்ட்ராக்டர் நேசமணி".. -ஐ தொடர்ந்து ‘TITLE’-ஆகும் இம்சை அரசன் பட வசனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலு பேசும் வசனங்களும், அவர் நடிக்கும் காட்சிகளும் எப்போதும் ட்ரெண்டாக இருக்கக் கூடியவை. இன்றும் மீம்ஸ்களில் வலம் வருவதில் பெரும்பாலும் வடிவேலுவின் டெம்ப்ளேட்தான்.

வடிவேலுவின் வசனங்கள் பல திரைப்படங்களில் பிரபலமானவை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வடிவேலு பேசும் வசனங்கள் அனுபவப் பூர்வமாகவும் வாய்விட்டு சிரிக்க கூடியதாகவும் இருக்கக்கூடியவை. அதனாலேயே அவருடைய வசனங்கள் பல திரைப்படங்களுக்கு தலைப்புகள் ஆகியும் வருகின்றன.

இதனிடையே வடிவேலு நடித்த பிரபலமான கேரக்டர்கள் சில தமிழ் படங்களுக்கு தலைப்புகளாகி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த முக்கிய கேரக்டரான நாய் சேகர் கேரக்டர் பிரபலமாக இருந்தது. சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்படுவதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் நடிகர் சதீஷ், நாய் சேகர் எனும் தலைப்பில் நடிக்கிறார் என்ற தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்தார். மேலும் இது குறித்து வடிவேலுவிடம் பேசி தெளிவுபடுத்தி விட்டதாகவும், வடிவேலுவின் படக்குழுவினர் வேறு ஒரு டைட்டிலில் படம் எடுக்கவிருப்பதாகவும் சிவகார்த்திகேயன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதேபோல் விஜய் & சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த முக்கிய கேரக்டர் கான்ட்ராக்டர் நேசமணி. ‘தலையில் சுத்தியல் விழும்போது’ சுருண்டு விழும் இந்த கேரக்டர் பேசும் வசனங்களில் ‘ஆணிய புடுங்க வேணாம்’ என்கிற வசனம் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு பிரபலமான இந்த ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்னும் தலைப்பில் ஓவியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.

இப்படி வடிவேலுவின் பிரபலமான கேரக்டர்கள் அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தலைப்புகளாகி வர, இன்னொருபுறம் வடிவேலுவின் பிரபல வசனங்களும் திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் தலைப்புகளாகி வருவதை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் வடிவேலு பேசும் லொஜக் மொஜக் பஜக் என்னும் வசனம் அரண்மனை 3-ஆம் பாகத்தில் திரைப்படப் பாடலாக இடம் பெற்றிருக்கிறது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி நடிப்பில் சுந்தர் சி இயக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

இதேபோல் நடிகர் வடிவேலு இதே போக்கிரி திரைப்படத்தில் பேசக்கூடிய பிளான் பண்ணி பண்ணனும் என்கிற வசனமும் பிரபல திரைப்படத்துக்கு தலைப்பானது. ஆம், விஜய் டிவி ரியோ ராஜ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியான திரைப்படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு பேசும் இன்னொரு வசனமும் திரைப்படம் ஒன்றுக்கு தலைப்பாகி இருக்கிறது. சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி.

நகைச்சுவையும் ஹீரோயிஸமும் கலந்த இந்த ஹிஸ்டாரிக்கல் பிக்ஷன் வகையறா திரைப்படத்தில், மன்னனாக இருக்கும் ‘புலிகேசி’ வடிவேலு ‘பன்றிக்கு நன்றி சொல்லி.. குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை’ என்ற ஒரு விடுகதையை படத்தின் நடுவில் ஒரு இடத்தில் சொல்வார்.

இப்போது இந்த வார்த்தையைதான்.. அதாவது ‘பன்றிக்கு நன்றி’ சொல்லி என்கிற வார்த்தையை தான், பிரபல திரைப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ், ஹெட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இந்த திரைப்படத்தை வழங்குகின்றனர்.

பாலா அரண் இந்த திரைப்படத்தை இயக்க, சுரேன் விகாஷ் இசையமைக்கிறார். விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்து தயாரிக்க, வியன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ செப் 28-ல் வெளியாகிறது.

Also Read: 90S Kids ஹீரோயின் அமலா!!.. 30 வருஷத்துக்கு அப்றம் தமிழ் படத்துல ரீ எண்ட்ரி.. ‘யார் ஹீரோ தெரியுமா?’

தொடர்புடைய இணைப்புகள்

Panrikku nandri solli new movie title vadivelu Imsai Arasan

People looking for online information on ContractorNesamani, Imsai Arasan 23am Pulikecei, Plan Panni Pannanum, Vadivelu will find this news story useful.