"அட, மீனாவா இப்டி?".. அசிங்கப்படுத்திய அப்பாவை லெஃப்ட், ரைட் வாங்கி சவால்! அதிர்ந்த குடும்பம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ரொம்ப நாள் கழித்து டூர்.. வெளிநாட்டு கடற்கரையில் கீர்த்தி சுரேஷ்.. வைரல் போட்டோஸ்

அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள பாச உறவுகளை மையப்படுத்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்ந்து வருவதால் பலரும் இதனை விறுவிறுப்புடனும் கண்டு களித்து வருகின்றனர்.

இந்த தொடரில், ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பமான நாள் முதலே ஒவ்வொரு எபிசோடுகளும் மிக விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. அதே போல, அண்ணன் தம்பிகளுக்கு இடையே சில பிரச்சனைகள் உருவாகி அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது குறித்தும் மிக சுவாரஸ்யமாக கதை நகர்ந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தற்போது மிகவும் பரபரப்பான ஒரு சம்பவமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அரங்கேறி உள்ளது. இந்த தொடரில் தற்போது மீனாவின் தங்கை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிகிறது. இதற்காக மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கே சென்றுள்ளனர். அப்போது, மீனாவின் அப்பா அவர்களை மோசமாக அசிங்கப்படுத்தியதாகவும் தெரிகிறது.

அவர்கள் அனைவரையும் மீனா சாப்பிட உட்கார வைத்து விட்டு சென்று விட, மீனாவின் அப்பாவும் அவர்களை அசிங்கப்படுத்த, இதனால் அங்கிருந்து அவமானத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வெளியேறுவதாக தெரிகிறது. இதனை குறித்து அறிந்ததும் நேராக தந்தையிடம் சென்று கோபப்படும் மீனா, "பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்பி விட்டீர்களா?" என கேட்க, பெரியப்பாவுக்கு ரெயில் நேரம் ஆனதால் அவர்களை எழுப்பி விட்டதாகவும் விளக்கம் கூறுகிறார் மீனாவின் தந்தை.

இது பற்றி தொடர்ந்து தாய் மற்றும் தந்தையிடம் முறையிட்டு கொண்டே இருக்கும் மீனா, "அந்த குடும்பம் உங்களுக்கு என்ன செஞ்சுருச்சுன்னு இப்படி கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க. வீட்டை புடுங்குனீங்க, கடைய புடுங்குனீங்க. இவ்ளோ செஞ்சும் உங்களுக்கு ஆத்திரம் அடங்கலைல்ல. காலையில் வந்ததுல இருந்தே உங்க மூஞ்ச பாக்க புடிக்கல" என கூறும் மீனா, தனது தங்கைக்காக தான் அவர்கள் வந்ததாகவும் ஆனால் அவர்களை வரவேற்கவில்லை என்றும் பெற்றோரிடம் ஆவேசமாக முறையிடுகிறார்.

"அவங்க சோறு இல்லாம இங்க வந்தாங்கன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா?. நீங்க எங்க வீட்டுக்கு வந்தா ஒரு வாய் சாப்பிட விடாம அவங்க அனுப்பமாட்டாங்க தெரியும்ல. இந்த வீட்டுக்கு வந்து அவமானப்படணும்ன்னு அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?. இங்க பாருங்க, நீங்க ரெண்டு பேரும் அவங்கள அவமானப்படுத்தல. என்னையும் அவமானப்படுத்தி இருக்கீங்க. நான் இங்க வந்ததே ஸ்வேதாவுக்காக (தங்கை) தான். போதும் நான் கிளம்புறேன்.

என் தங்கச்சியோட கல்யாணத்துக்கும் நான் வருவேன். உங்க ஈனபுத்திக்காக என் தங்கச்சிய விட்டு கொடுக்க முடியாது. ஆனா, இவ (தங்கச்சி) கல்யாணத்துக்கு முன்னாடி என் குடும்பத்துக்கு முன்னாடி நீங்க வந்து நிப்பீங்க. பேசுவீங்க, கெஞ்சிகிட்டு நிப்பீங்க. அந்த நாள் வரும் பாருங்க. அன்னைக்கு அவங்க எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு இதே இடத்துல கம்பீரமா வந்து நிப்பேன்" என ஆவேசமாக பேசிய படி, தனது குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பி செல்கிறார் மீனா. அவரது பேச்சைக் கேட்டு பெற்றோர் மற்றும் தங்கை ஆகியோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.

Also Read | ஹவுஸ்மேட்ஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. களைகட்டிய வீடு.. இதுக்கு தான் Waiting!!.. bigg boss tamil 6

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan Stores meena challenge to her parents

People looking for online information on Pandian stores, Pandian stores serial, Pandian Stores Serial Episode, Vijay Television will find this news story useful.