“நிறைய பேர் இப்படி கேக்குறாங்க!”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் திடீர் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது பெயரிலான போலி கணக்குகள் இருந்து செல்லும் மெசேஜ்கள் சம்பந்தமான விளக்கத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் தற்போது தமது ரசிகர்களுக்காக அளித்துள்ளார்.

அதில், “சமீபமாக நிறைய பேருக்கு என் பெயரிலான பேஸ்புக் கணக்கில் இருந்து மெசேஜ் போவதாகவும், அது நீங்கள்தானா என்றும் கேட்கிறார்கள். ஆனால் நான் பேஸ்புக்கிலேயே இல்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் ஆக்டிவாக இருக்கிறேன். இதுகுறித்த சில கணக்குகளை நான் ரிப்போர்ட் செய்துவிட்டேன். எனினும் எனது பேஸ்புக் கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அவற்றுக்கு வினையாற்றுவதை தவிருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் விலகுகிறார் என்கிற வதந்திகளும் வெளியாகியிருந்தன. ஆனால் அண்மையில் அவற்றுக்கும் குமரன் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். உண்மையில் குமரன் வெள்ளித்திரையில் நடிக்கும் ஒரு படத்துக்காக ஒரு குட்டி விடுப்பினை பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து எடுத்திருந்தார். அவ்வளவே. 

படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டுக்கு வந்த குமரன், ‘நான் இல்லாமல.. உங்க பாண்டியன் ஸ்டோர்ஸில் உங்கள் கதிராக நான் இருக்கிறேன்' என்று தமது ரசிகர்களுக்கு கூறியிருந்ததுடன், பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். 

கதிர் கதாபாத்திரத்தில் வரும் குமரனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைந்து முல்லையாக நடித்தவர் மறைந்த நடிகை சித்ரா. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளாமாக இருந்ததும் அனைவரிடத்திலும் சித்ராவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. மறைவுக்கு முன் சித்ரா வெள்ளித்திரையில் நடித்திருந்த கால்ஸ் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ALSO READ: 

“நிறைய பேர் இப்படி கேக்குறாங்க!”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் திடீர் அறிவிப்பு! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Pandiyan Stores Kumaran Over Facebook Fake id குமரன்

People looking for online information on Kumaran, PandiyanStores will find this news story useful.