விடாமல் அழும் குழந்தை.. தாய்ப்பால் கொடுக்கும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஜய் டிவி பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அதில் சீரியல்களும் அடங்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு ரகம்.

Advertising
>
Advertising


கூட்டுக்குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கதை அம்சம் உள்ளதால் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அண்ணன் தம்பி செண்டிமெண்ட், கூட்டு குடும்பம் என்று பரபரப்பாக செல்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். நான்கு அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு, குடும்பத்தை எவ்வாறு அனுசரித்து செல்கின்றனர் என்பதை தெளிவாக காட்டும் இத்தொடருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.


மீனா கேள்வி

அப்படிப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், இன்றைய எபிசோடில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. ஆரம்பத்தில் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் மீனா, கண்ணனிடம் என் குழந்தையை நீ தூக்குறதே இல்ல, பெரிய அண்ணி குழந்தையை தான் தூக்குற என்று கேட்க, அப்படியெல்லாம் இல்ல அண்ணி, அவன் சின்ன குழந்தைல அதான் நான் அடிக்கடி தூக்குறேன் என்று கண்ணன் சொல்கிறார்,பிறகு அனைவரும் வீட்டுக்குள் செல்கின்றனர். தனம் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்க, திடீரென்று அழுக தொடங்குகிறது.

தொடர்ந்து அழுகை

குழந்தையை மாற்றி மாற்றி தூக்கி சமாதானம் செய்ய, விடாமல் குழந்தை அழுகிறது. முல்லை குழந்தையைத் தொட்டிலில் போட்டு சமாதானம் செய்ய குழந்தை மீண்டும் அழுகிறது. ஐஸ்வர்யா கண்ணன் அனைவரும் சமாதானம் செய்ய குழந்தை அழுகையை நிறுத்துவது போல் இல்லை. அந்த இடத்திற்கு வரும் மீனா, குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். கயல் அழும்போது நான் எப்படி சமாதானம் செய்யவேனோ, அதுபோல் நான் சமாதானம் செய்து கொள்கிறேன் என்று குழந்தையை தூக்கிக் கொண்டு தனது அறைக்கு செல்கிறார் மீனா. வீட்டில் இருக்கும் சூழ்நிலையை, மருத்துவமனைக்கு சென்றிருக்கும் தனத்திடம் சொல்கிறார் முல்லை. இதைக் கேட்டவுடன் பதறிப் போகிறார் தனம்.

கயல் பாப்பா

கயல் பாப்பாவுடன் ஐஸ்வர்யா கண்ணன் விளையாடிக்கொண்டிருக்க, மூர்த்தியுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கும் தனம், பதறிப்போய் வருகிறார். மீனா குழந்தையை சமாதானம் செய்துவிட்டார் என்று முல்லை சொல்ல, மீனா அறைக்கு சென்று பார்க்கிறார் தனம். மீனா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பார்த்து, அப்படியே உறைந்து போய் நிற்கிறார். சமாதானமான குழந்தை அமைதியாக விளையாடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் பூரிப்பில் நிற்கிறார் தனம். நடந்த விஷயம்  அனைத்தையும் மூர்த்திக்கு தனம் தெரியப்படுத்த, அவரும்,  இதைக் கேட்டு எமோஷனலாகிறார். இப்படிவிறுவிறுப்பாக செல்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். நினைத்ததை மூடி மறைக்காமல், பட்டென்று பேசும் மீனா கதாபாத்திரம், அடிக்கடி இப்படி நல்ல விஷயங்களை செய்து ஸ்கோர் செய்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pandian stores upcoming serial episode scored by meena

People looking for online information on பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு, மீனா, Kayal, Meena, Pandian stores, Vijay tv will find this news story useful.