PANDIAN STORES : பொங்கி எழுந்த ஜீவா.. அண்ணன் மூர்த்தியிடம் அடுக்கிய கேள்விகள்! உடைகிறதா குடும்பம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சூடுபிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | Naatu Naatu : 'நாட்டு நாட்டு' ஆஸ்கார் விருது .. RRR நடிகர் ராம் சரண் சொன்னது என்ன?!

இந்த நிலையில் கதிர் தனியாக தனது ஹோட்டலை கவனித்துக் கொள்ள கடைசி தம்பி கண்ணன் வங்கி வேலைக்குச் செல்ல அண்ணன் மூர்த்தியுடன் கடையை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு நெருக்கடிகள் அதிகமாகின்றது. இதே போல் வீட்டில் மீனாவுக்கும் அதிக வேலைப்பளு உண்டாகிறது. இதற்கு காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவை தவிர அனைத்து பெண்களுமே கர்ப்பமாக இருப்பதுதான். இதனால் அனைத்து பெண்களுக்கும் மீனா வேலைகள் செய்கிறார்.

Image Credit : vijay television

இந்த நிலையில்தான் கடையை பார்த்துக் கொள்ளாமல் மீனாவுக்கு வலி வந்ததும் ஜீவா அவரை அழைத்துக் கொண்டு சென்றது குறித்து மூர்த்தி, தன் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் வைத்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஜீவா, “நான் ஆட்டோவில் ஏற்றி விடலாம் என்றால் ஆட்டோவிற்கு நீங்கள் ஒன்றும் காசு கொடுத்து வைக்கவில்லையே? காசு கொடுத்து வைத்தது போல் கேட்கிறீர்களே? எதற்காக கல்லாவை பூட்டி வைத்தீர்கள்? நான் அந்த பணத்தை எடுத்துக் கொண்டே எங்கேயாவது ஓடி விடுவேன் என்று பயந்தா? ஒரு 25 நிமிடம் கடையில் இல்லாததற்கா ஏன் இத்தனை கேள்விகள்?” என்றெல்லாம் அதிரடியாக கேள்விகளை கேட்கிறார்.

Image Credit : vijay television

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைத்தும் உறைந்துபோய் நிற்கிறது. இதனால் இந்த குடும்பத்துக்குள் சண்டை வருமா என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி உண்டாகி இருக்கிறது.

Image Credit : vijay television

ஏற்கனவே கதிர் மற்றும் முல்லை ஒரு மனஸ்தாபத்தால் இந்த குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியே சென்று வாழ்ந்து நிலையில், அவர்கள் தற்போது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து விட்டனர். 

Image Credit : vijay television

இந்த நிலையில்தான் அண்மையில் ஜீவாவின் மாமனார் சில சூழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக ஜீவாவின் மனதுக்குள் இருப்பதையும் அவர் அறிந்தார்.

Image Credit : vijay television

இப்படி ஜீவாவுக்கு வேலை நெருக்கடிகள் அதிகம் என்பதையும் அதை ஜீவாவின் அண்ணன் மூர்த்தியும் அவருடைய குடும்பமும் புரிந்து கொள்ளாதது போல் தெரிகிறது என்பதும் இந்த சீரியலில் தற்போது பூதாகரப் பிரச்சினையாக மாறி வருகிறது. இதன் விளைவுகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | The Elephant Whisperers : நீலகிரி டூ ஆஸ்கார் பயணம்..! ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Serial update Jeeva shout out to Moorthy

People looking for online information on Pandian stores, Pandian Stores Today Episode, Star vijay, Vijay tv will find this news story useful.