"இது அதுல்ல..?" - அதான் இல்ல.? கடைசியில் கதிர் வெச்ச ட்விஸ்ட்.. ‘பலே’ பாண்டியன் ஸ்டோர்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ், பல சரக்கு கடை மரபை தொடரும் குடும்பம். கூட்டு குடும்பமாக அண்ணன்-தம்பி பாசத்துடன் வாழ்ந்து வருவது தான் இந்த கதை.

Advertising
>
Advertising

Also Read | "ARR இசை.. பொன்னியின் செல்வன் RR பணியில் டிரம்ஸ் சிவமணி" - பின்னணியில் கார்த்தி Look.!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மிக முக்கியமான சீரியலாக விளங்கும் இந்த சீரியலில் அவ்வப்போது குடும்பத்தில் சண்டை, சச்சரவு, திடீர் திருப்பம் வருவது உண்டு. என்ன நடந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது என்பது இந்த சீரியலில் வரும் கேரக்டர்களில் இருக்கும் சிறப்பு அம்சம்.

குடும்பத்தை பிரிந்த கதிர் & முல்லை

ஆனால் அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கதிர் மற்றும் முல்லை இருவரும் பிரிந்து தனியே வீடு எடுத்து சென்றிருக்கின்றனர். இந்த காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பார்வையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். பலரும் கதிர் மற்றும் முல்லை இருவரும் மீண்டும் குடும்பத்துடன் வந்து சேரவேண்டும் என்று தொடர்ச்சியாக இணையதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

சுயமாக நிற்கட்டும்:

இன்னும் சிலர், இப்போதாவது கதிர் மற்றும் முல்லை இருவரும் சொந்தக்காலில் சுயமாக நிற்கட்டும். இல்லை என்றால் மற்றவர்கள் பேச்சை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலைமை அவர்களுக்கு உண்டாகிறது. சுயமரியாதையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அதற்கு இந்த முடிவு சரிதான் என்று ஆதரவும் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் புது வீடு பார்த்துவிட்டு வெளியே வந்த கதிர் & முல்லை சாலையில் நடந்து வர, எதார்த்தமாக தம்முடைய அண்ணன் ஜீவா மற்றும் மூர்த்தி அண்ணனின் மனைவி தனம் ஆகியோரை கதிர் வழியில் சந்திக்கிறார். அப்போது கதிருடன் முல்லையும் இருக்கிறார்.

ஆசீர்வாதம் பண்ண போன தனம்:

அப்போது வீடு அமைந்தது குறித்து முல்லை தனத்திடம் தெரிவிக்க, இதனிடையே கதிரின் சாவி எதார்த்தமாக கீழே விழுந்து விடுகிறது, அவரும் சாவியை எடுப்பதற்காக கீழே குனிகிறார். ஆனால் அவர் சாவியை கீழே போடுவது போல போட்டு, தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கத்தான் கீழே குனிகிறார் என்று தனம் நினைத்துக் கொண்டு ஆசீர்வாதம் பண்ணுவதற்கு முயற்சிக்க, ஆனால் கதிர் சாவியை மட்டும் எடுத்துக் கொள்வதாக புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. உடனே ஆசீர்வாதம் பண்ணுவதற்கு கையெடுத்த தனம், கதிர் சாவியை மட்டும் தான் எடுப்பதற்காக கீழே குனிந்தா என்பதை புரிந்து கொண்டு, ஆசீர்வாதம் பண்ண வந்த கையை பின்னால் இழுத்துக் கொள்கிறார் என்பதாக ப்ரோமோவில் காட்டப்படுகிறது.

கதிரின் ட்விஸ்ட்..?

பொதுவாகவே இந்த காட்சிக்கு மூலக்காட்சி சூரியவம்சம் திரைப்படத்தில், தேவயானி தன் மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் அந்த காட்சிதான்.. பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் இதே காட்சியை ஆர்யா & சந்தானம் நகைச்சுவையாக கையாண்டிருப்பார்கள். இந்த நிலையில் அதே காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸில் வருகிறதா.? என்று எதிர்பார்த்தால், கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்களும் புதிய பரிமாணங்களும் வருவதாக தெரிய வர ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர்.

Also Read | "கஷ்டமா இருக்கு.. கதிர் & முல்லை போயிருக்க கூடாது.!" - கதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.. .!

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Kathir blessing twist new viral promo

People looking for online information on Pandian stores, Pandian Stores episode today, Pandian Stores New Promo, Pandian Stores Today Episode will find this news story useful.