“கடைசி வர உன்ன பாக்க முடியலயேம்மா”.. “கண்ணா”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா - மகன் .. INTERVIEW!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ், பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்படும் சென்சேஷ்னல் சீரியலாக தற்போது மாறியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவணன் விக்ரம், ஐஸ்வர்யா கேரக்டரை திருமணம் செய்து கொண்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களுக்கு அதிருப்தி ஏற்படவே, கண்ணன், ஐஸ்வர்யாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த விஜே தீபிகா மாற்றப்பட்டு சாய் காயத்ரி தற்போது நடித்து வருகிறார். முன்னதாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த தீபிகாவுக்கு சாய் காயத்ரி வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த சீரியலில் தற்போது முக்கிய இழப்பு நடந்ததுள்ளது. ஆம், இந்த சீரியலில் மறைந்த பாண்டியனின் மனைவியும், பாண்டியன் ஸ்டோர் சகோதரர்களின் தாயாருமான லட்சுமி உயிரிழக்கிறார். இந்த காட்சிகளில் அனைவரும் அழும் காட்சிகள் அனைவரையும் உருக்கியது. தொடர்ந்து சில நாட்களாக இந்த சீரியலில் இந்த இறப்பு காட்சி குறித்தும், இந்த காட்சியின்போது நடிகர்களின் நடிப்பு குறித்தும் பேசி வருகின்றனர்.

இதனிடையே லட்சுமி அம்மா இறந்து போன பிறகு கடைசியாக தான் பார்க்க வருகிறார் கண்ணன். அவர் ஓடி வந்து அம்மாவின் இறப்பின் போது அழுது புரண்டு நடித்ததும், பிறகு மொட்டை அடித்ததும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒரு சீரியலில் வரும் ஒரு கேரக்டருக்காக மொட்டை அடிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் என்று சொன்னால் சரவணனுடைய அர்ப்பணிப்பு மிக முக்கியமானது என்று பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே லட்சுமி கேரக்டரில் நடித்த ஷீலா மற்றும் இந்த சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவணன் இருவரும் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். முன்னதாக இந்த நேர்காணலில் இவர்கள் இருவரும் சர்ப்ரைஸாக சந்தித்துக்கொண்ட சுவாரசிய சம்பவமும் நடந்தது.

இதுகுறித்து பேசிய சரவணன், “எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பாக சீரியலில் ஒரு இறப்பு காட்சியை இவ்வளவு லைவாக செய்து நான் பார்த்ததில்லை. நான் பெரும்பாலும் அந்த இடத்தில் இல்லை. என்னுடைய காட்சிகள் எல்லாம் தனியாக எடுக்கப்பட்டிருக்கும்.

இதில் அம்மாவாக நடித்திருந்த ஷீலா அம்மா தான் இந்த காட்சிகளைப் பொறுத்தவரை ஹீரோ என்று சொல்லலாம். அவருடைய ஒத்துழைப்பு தான் இந்த காட்சி அருமையாக வந்ததற்கு காரணம். வாயில் அரிசி, மூக்கில் பஞ்சு என அவரைப் பார்க்கும்போது மிகவும் பாவமாக இருந்தது. அவரை உண்மையிலேயே படுக்க வைத்து, மேலே சாணி வறட்டியை வைக்கும் காட்சி எடுக்கப்பட்டது.

இந்த வயதில் இவ்வளவு டெடிகேஷனாக இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்த காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் இன்னும் மனதிற்குள்ளே இருக்கிறது. இன்னும் அதிலிருந்து வெளியே வரவில்லை”  என்று பேசிக் கொண்டிருந்தவர், திடீரென நேர்காணல் அறைக்குள் நடிகை ஷீலா (லட்சுமி கேரக்டரில் நடித்தவர்) நுழைந்தவுடன் சர்ப்ரைஸ் ஆன சரவணன், ஒரு கணம் கண்ணனாக மாறி, அம்மா என்னம்மா என்று கேட்கிறார். உடனே ஷீலா “நான் போகும்போது கடைசிவரை உன்னை பார்க்காமல் போய்விட்டேனடா கண்ணா” என்று சொல்லி சிரிக்கிறார்.

உண்மையிலேயே கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கண்ணனாக நடிக்கும் சரவணன், லட்சுமியாக நடித்த ஷீலாவை பார்க்கவே இல்லை என்று அவர்கள் இருவரும் அங்கு பகிர்ந்து கொண்டனர். மேலும் இது குறித்து பேசிய சரவணன், இந்த காட்சிகளை வீட்டில் இருந்து பார்க்கும்போது மிகவும் அழுகை வந்ததாகவும், “அன்னைக்கு பார்க்க மிஸ் பண்ணிட்ட அம்மாவை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய ஷீலா, இந்த காட்சிகளை பார்த்து முடித்த பின்னர் இந்த காட்சிகளில் சரவணன் அழுத காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருப்பதாக பாராட்டியதுடன், அவர் அழுத மாடுலேஷன் டப்பிங்கில் அருமையாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இனிமேல் உங்களை எங்கே போய் பார்ப்பேன் அம்மா” என்று சரவணன் பேட்டியின் போது அழுது,  தத்ரூபமாக நடித்துக் காட்டுகிறார். இவர்கள் பேசும் எமோஷனலான இந்த நேர்காணல் முழுவதையும் இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

“கடைசி வர உன்ன பாக்க முடியலயேம்மா”.. “கண்ணா”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா - மகன் .. INTERVIEW! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pandian stores kannan lakshmi emotional interview video

People looking for online information on Exclusive, Interview, PandianStores, Saravanan vickram, Sheela, Trending, TVSerial, VijayTelevision, Vijaytv will find this news story useful.