"கஷ்டமா இருக்கு.. கதிர் & முல்லை போயிருக்க கூடாது.!" - கதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.. .!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணன் தம்பி பாசத்தினை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertising
>
Advertising

Also Read | "ARR இசை.. பொன்னியின் செல்வன் RR பணியில் டிரம்ஸ் சிவமணி" - பின்னணியில் கார்த்தி Look.!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள், சகோதரர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும், கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி தம்பி, கண்ணன், ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு வந்தார். இதனால் இந்த குடும்பம் கொஞ்சநாள் கோபத்தில் இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக ஆகி விட்டனர்.

கதிர் & முல்லை திடீர் முடிவு :

இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த தம்பி கதிர் மற்றும் கதிரின் மனைவி முல்லை இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து பிரிந்து வெளியேறி தனியான வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டனர். இது குறித்து ரசிகர்களிடத்திலே மிகப்பெரிய அதிர்ச்சி உண்டாகி இருக்கிறது.

ரசிகர்கள் கவலை:

இது தொடர்பாக பொதுமக்களிடம் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கருத்து கேட்கப்பட்டது. இது பற்றி கூறிய பலரும், “எதுவாக இருந்தாலும் குடும்பத்துடன் கதிர் & முல்லை பேசி தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் வெளியே செல்வது சரியல்ல.. கதிர் & முல்லை திரும்பி வாருங்கள்.. குடும்பத்துடன் சென்று சேருங்கள்.. குடும்பம் தான் மகிழ்ச்சி .. கூட்டு குடும்பம் தான் ஆரோக்கியம்” என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் இன்னொரு பார்வை:

இன்னும் சிலர், “கதிர் & முல்லை இப்போது இந்த முடிவை எடுத்தது நல்லது தான்.. அவர்களுக்கு அவரவர் வயதில் செய்ய வேண்டியதை செய்தால் இப்படி மற்றவர்கள் பேச்சுக்கு அவசியமில்லாமல் போகும். கதிர் மற்றும் முல்லை வெளியேறுவதற்கான அவசியம் இல்லாமல் போயிருக்கும். எது எப்படியோ கதிர் மற்றும் முல்லை இருவரும் குடும்பத்தின் மீதான வெறுப்பில் செல்லவில்லை, சுயமாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் செல்கிறார்கள்.. அதுவும் ஒரு வகையில் நிறைய அனுபவங்களை கற்றுத் தரும் ஒரு விஷயம் தான்.. இப்படி இருப்பதும் நல்லதுதான்.!” என்று கூறி வருகின்றனர்.

குடும்பத்தில் ஒன்றான சீரியல் கேரக்டர்கள்:

இப்படி அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய சீரியல்களுள் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கிறது. பலரும் இந்த கதாபாத்திரங்களை தங்கள் சொந்த வீட்டு கதாபாத்திரங்களாகவே நினைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டுப் பையன் பெயரை சொல்வது போல. கதிர் இப்படி செய்தது கஷ்டமாக இருக்கிறது.. என்று மிகவும் எமோஷனலாக கூறி இருக்கின்றனர். சீரியல்கள் வெகுஜன மக்களின் வாழ்க்கையுடன் எந்த அளவுக்கு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கிறது என்பதை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இதனிடையே கதிர் மற்றும் முல்லை இருவரும் தனியாக வாழ்க்கையை தொடங்குவதற்கான பணிகளில் ஆயத்தமாகும் புதிய ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.

Also Read | ரசிகர்களின் அன்பு வென்றது.! விலகுவதாக அறிவிச்ச சீரியல் ஹீரோவின் நெகிழ்ச்சி முடிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores fans about kathir mullai decision

People looking for online information on Pandian stores, Tv Serial, Vijay tv will find this news story useful.