எல்லாம் கண்ணனால.. பளார் விட்ட மூர்த்தி..!! பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சூடுபிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர். 

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி.. நேரில் கௌரவித்த தமிழக முதல்வர்.

இவர்களுள் கதிர் தனியாக தனது ஹோட்டலை கவனித்துக் கொள்ள கடைசி தம்பி கண்ணன் வங்கி வேலைக்குச் செல்ல அண்ணன் மூர்த்தியுடன் கடையை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு நெருக்கடிகள் அதிகமாகின்றது. இதே போல் வீட்டில் மீனாவுக்கும் அதிக வேலைப்பளு உண்டாகிறது. இதற்கு காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவை தவிர அனைத்து பெண்களுமே கர்ப்பமாக இருப்பதுதான். இதனால் அனைத்து பெண்களுக்கும் மீனா வேலைகள் செய்கிறார்.

இந்த நிலையில்தான் கடையை பார்த்துக் கொள்ளாமல் மீனாவுக்கு வலி வந்ததும் ஜீவா அவரை அழைத்துக் கொண்டு சென்றது குறித்து மூர்த்தி, தன் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் வைத்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஜீவா, “நான் ஆட்டோவில் ஏற்றி விடலாம் என்றால் ஆட்டோவிற்கு நீங்கள் ஒன்றும் காசு கொடுத்து வைக்கவில்லையே? காசு கொடுத்து வைத்தது போல் கேட்கிறீர்களே? எதற்காக கல்லாவை பூட்டி வைத்தீர்கள்? நான் அந்த பணத்தை எடுத்துக் கொண்டே எங்கேயாவது ஓடி விடுவேன் என்று பயந்தா? ஒரு 25 நிமிடம் கடையில் இல்லாததற்கா ஏன் இத்தனை கேள்விகள்?” என்றெல்லாம் அதிரடியாக கேள்விகளை கேட்கிறார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உறைந்துபோய் நிற்கிறது. குறிப்பாக மூர்த்தி நிலைகுலைந்து போகிறார். ஏற்கனவே கதிர் மற்றும் முல்லை ஒரு மனஸ்தாபத்தால் இந்த குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியே சென்று வாழ்ந்து நிலையில், அவர்கள் தற்போது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து விட்டனர். இதனிடையே தற்போது மீனாவின் வீட்டு திருமணத்தில் ஜீவாவின் மாமனார் சில சூழ்ச்சிகளை செய்து ஜீவாவை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்கும் வேலையை செய்யத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் கண்ணன் - ஐஸ்வர்யா, கதிர் - முல்லை என அனைவரும் தனித்தனியே மொய் வைக்க போகின்றனர். அது பற்றி மூர்த்தி - தனம் தம்பதிக்கு தெரியாது. ஆனால் ஜீவா - மீனா தம்பதியோ அண்ணன் - அண்ணி மொத்தமாக மொய் வைத்துவிடுவார்கள், நாம் தனியே மொய் வைக்க வேண்டியதில்லை என முடிவெடுக்கின்றனர்.

இந்நிலையில் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகிறது.  இது மீனாவின் தந்தை மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம்  ஆவேசமாக வந்து, “எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே.. எனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!” என அழுது கத்துகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெருத்த குழப்பம் ஏற்படுகிறது.

ஆனால் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கண்ணன் செய்த வேலைதான் என அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கரித்துக்கொட்டி வருகின்றனர். ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸின் கடைசி தம்பி கண்ணன் வங்கியில் வேலை பார்க்கிறார். இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யாவும், கதிர் - முல்லை தம்பதி போலவே தங்கள் பெயர்களில் தம்பதி சகிதமாக தனியே மொய் வைக்க எண்ணுகின்றனர். ஆனால் அதுபற்றி அண்ணன்மார்களிடம் கலந்து ஆலோசிக்கவும் இல்லை, தகவல் சொல்லவும் இல்லை. இந்நிலையில் அவரிடம் மொய்க்கவரை கொடுத்த அவரது அண்ணன் மூர்த்தி 50 ஆயிரம் பணத்தை கொடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் போடச் சொல்லி அழுத்தம் திருத்தமாக சொல்லி அனுப்பினார். ஆனால் கண்ணனோ, மொய் வைக்கும்போது கதிர் - முல்லை சார்பிலான மொய் பணத்தை முல்லையின் தாயாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு செல்கிறார். இப்படி மொத்தம் 3 மொய் கவரை கண்ணன் கையில் வைத்துள்ளார். ஒன்று தங்களுடைய சார்பில், இன்னொன்று கதிர் - முல்லை சார்பில் தனியே இருந்த மொய்ப்பணம், 3வது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரிலான மொய் பணம். அதில்தான் ஜீவா & மீனாவுக்கான மொய்ப்பணம் உள்ளது.

ஆனால் கண்ணனோ பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடச்சொல்லி தன் அண்ணன் சத்தியமூர்த்தி கொடுத்த மொய்ப்பணத்தை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடாமல் சத்தியமூர்த்தி - தனலட்சுமி பெயரில் போட்டுவிட்டார். இதனால் ஜீவா - மீனா தம்பதி பெயர் மட்டும் மொய் லிஸ்டில் இடம்பெறாமல் போகிறது. நடப்பது மீனாவின் தங்கை திருமணம் என்பதால், மீனாவின் தந்தை இதை மீனாவிடம் கேட்டுவிட்டதாலும் மீனாவுக்கு அவமானமாகிறது. இதை அவர் ஜீவாவிடம் கேட்க, ஜீவாவோ ஏமாற்றத்தால் கோபமும் அழுகையுமாக அண்ணன், தம்பிகளிடம் சென்று சண்டையிட்டு,. தனக்கு இனி அந்த குடும்பத்துடன் தொடர்பே இல்லை என்றும், அந்த வீட்டுக்கே தான் வரப்போவதில்லை என்றும் சொல்லிவிடுகிறார்.

இதை கேட்ட மூர்த்தி அத்தனை பேர் முன்னிலையிலும் கண்ணன் செய்த குளறுபடிக்காக பளார் என்று அடித்துவிடுகிறார். இதனிடையே மீனாவின் தந்தையோ மூர்த்தி வேண்டுமென்றே மாற்றி சொல்லி நாடகமாடுவதாக ஏற்றிவிடுகிறார். இன்னொரு பக்கம் கதிர், முல்லையிடம் இதுபற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறார். இது எங்கே சென்று முடியும் என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில்தான் தெரியவரும். ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவாரா? அல்லது ஏற்கனவே ஒருமுறை கண்ணனும், இன்னொருமுறை கதிரும் பிரிந்து சென்றது போல், இம்முறை ஜீவா தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறுவரா என்பது பொறுத்திருந்துதான் தெரியவரும்.

Also Read | PS2 பின்னணி இசை பணியில் AR ரஹ்மான் – மணிரத்னம்… லண்டனில் இருந்து வைரல் BTS ஸ்டில்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores 2023 feb 21 episode Pandian Stores update

People looking for online information on Pandian Stores Promo, Pandian Stores Today Episode, Pandian Stores today Promo will find this news story useful.