கவனிச்சீங்களா? பாவனி பக்கத்துல இருக்குற அந்த புது ஆளை?.. வைரலாகும் #BIGGBOSSTAMIL5 ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நாடியா, அபிஷேக், சின்னபொண்ணு, சுருதி மதுமிதா, இசைவாணி உள்ளிட்டோர் வெளியேறி இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

இந்நிலையில், முன்னதாக வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த டாஸ்குகள் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகின்றன.

தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறுகின்றனர். ஆம், பள்ளி நினைவுக்கு செல்லக்கூடிய இந்த டாஸ்கின் முதல் ரவுண்டாக ‘கனா காணும் காலங்கள்’ சுற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் அதற்கு ஏற்ற உடை அணிந்துகொண்டு, வலம் வரக்கூடிய காட்சிகளை புதிய ப்ரோமோவில் பார்க்க முடிகிறது. இதில் பள்ளி முதல்வராக சிபியும் மாஸ்டராக ராஜூ, அபிஷேக் உள்ளிட்ட சிலர் வலம் வருகின்றனர். அந்தவகையில் புதிய ஒரு போட்டியாளர் இந்நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டிருக்கிறார்.

அதன்படி, தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு புதிய போட்டியாளர் வந்திருப்பதாக தெரிகிறது. இந்த இந்த புதிய டாஸ்க் பற்றி ராஜூ விளக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் பாவனியின் அருகில் அமர்ந்திருக்கிறார். அவர் யார் என்று கூர்ந்து பார்த்தால் அவர் பிரபல விஜய் டிவி கோரியோகிராபரான அமீர் என்பது தெரியவருகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளுக்கும் கோரியோகிராபி செய்த அமீருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் புதிதாக களமிறக்கப்பட்டு இருக்கிறார் என்பது ப்ரோமோவில் இருந்து தெரியவந்திருக்கிறது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்றால் அது குறித்த முழு விவரங்களையும் எபிசோடில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

கவனிச்சீங்களா? பாவனி பக்கத்துல இருக்குற அந்த புது ஆளை?.. வைரலாகும் #BIGGBOSSTAMIL5 ப்ரோமோ! வீடியோ

Noticed new woild card entry biggbosstamil5 viral promo

People looking for online information on Biggboss, Biggboss tamil5 wildcard, Biggbosstamil, BiggBossTamil5, Biggbosstamil5 new entry, Biggbosstamil5 wildcard, Wildcard will find this news story useful.