NIVASHINI : "அந்த பையன் அசல் ஒன்னுமே பண்ணல.. அவனதான் ELIMINATE பண்ணனுமா? - கதறும் நிவாஷினி BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் அசல் வெளியேறும் பொழுது, அவரை கட்டிக்கொண்டு நிவாஷினி அழுதார். அவரை தேற்றிவிட்டு அசல் வெளியே சென்றார். தற்போது அசல் குறித்து பிக்பாஸ் வீட்டில் நிவாஷினி பேசியிருக்கிறார். முன்னதாக சாப்பிடும் பொழுது நிவாஷினி அழுது கொண்டே இருந்தார். அவரை குயின்சி தேற்றினார்.

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே சென்று அமர்ந்த நிவாஷினி, அசல் குறித்த பேச்சை தொடர்ந்தார். கேமரா முன் தனியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பேசிய நிவாஷினி “இந்த வீட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.. அசல் ஏன் எலிமினேட் ஆனான் என்று சுத்தமாக புரியவில்லை.. அவ்வளவு விதிமீறல்களை பண்ணிய அசீமே உள்ளே இருக்கிறார். அந்த அசல் பையன் ஒன்றுமே பண்ணவில்லை. அவனை ஏன் வெளியேற்றினார்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. அவனை தான் எலிமினேட் செய்ய வேண்டுமா? இந்த வீட்ல வேற யாருமே இல்லையா?” என்று புலம்பினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Nivashini questioning and crying asal elimination biggboss tamil

People looking for online information on Asal Kolar Nivashini, Asal nivashini, Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janani, Rachitha, Robert, Robert rachitha will find this news story useful.