"சரி விடு.. அப்டி இருக்கனும்னு தோனுச்சுனா சீக்கிரம் வெளில வா" - கதறியழுத நிவாஷினி.. தேற்றிய அசல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | PHOTOS: காமாட்சி அம்மன் கோயிலில் பிரபல PS1 நடிகை.. நெற்றி நிறைய விபூதி பூசி வைரல் ஃபோட்டோஸ்!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். பின்னர் அசலா? அசீமா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார், யார் உள்ளே இருப்பார் என நிவாஷினியிடம் கமல் கேட்டார். அப்பொது நிவாஷினி அசல் என பதில் அளித்தார். அசீமோ, தான் வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அப்படி நடந்தால் ஏற்பதாகவும் அது மக்கள் கொடுக்கும் பாடம் என்றும் கூறினார். இதேபோல் அசலோ, ‘நான் என்ன பண்ணினேன் என என்னை இங்கு கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை’ என கூறினார்.

அதற்கு கமல்ஹாசன், “அசல்? உள்ளே இருப்பாரா? வெளியே போவாரா? என்ன சொல்கிறீர்கள்?” என கேட்க, மீண்டும் நிவாஷினி, ‘அசல் உள்ள இருப்பாரு.. இருக்கணும்..’ என கூறினார். அதன் பின்னர் அசல் எலிமினேட் ஆவதாக கமல் அறிவித்ததுமே, நிவாஷினி உடைந்து அழ தொடங்கினார். அவரை தேற்றிய அசல், ‘பாத்துக்கலாம்.. அப்படி இப்படி இருக்கணும்னு தோனுச்சுனா சீக்கிரமா வெளில வா’ என்றார். அதாவது அசல் எப்போதுமே துருதுருவென மிடுக்காகவும் ஜாலியாகவும் இருப்பார். எதையும் அலட்டிக்கொள்ளவும், பெரிதாக எடுத்துக்கொள்ளவும் மாட்டார். தன்னை போலவே மற்றவர்களையும் ஜாலியாகவே பார்ப்பார்.

அந்த வகையில் நிவாஷினியுடன் நட்பாகவும் இருந்துவந்தார். எனவே அசலின் பிரிவை தாங்கவியலாத நிவாஷினியிடம் அசல் ஆறுதல் கூறினார்.

மேலும் வெளியில் சென்று தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், தான் உள்ளே இருக்க வேண்டாம் என மக்கள் நினைப்பதாகவும் நண்பர்களிடம் குறிப்பிட்டு அசல் வெளியேறினார். பின்னர் வெளியே வந்ததும், அவரிடம், “நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா?” என கமல்ஹாசன் கேட்க, “இல்ல சார்.. இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நிறைய பண்ணியிருப்பேன். எனினும் இனி வெளியில் நான் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது” என தன்னம்பிக்கையுடன் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் விறுவிறுப்பாக மாறிக்கொண்டு வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read | STR நடிக்கும் 'பத்து தல' படத்தின் திருவிழா பாடல் காட்சி.. வைரலாகும் BTS ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Nivashini Cried in Asal Kolar elimination bigg boss 6 tamil

People looking for online information on Asal kolar elimination, Asal nivashini, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Nivashini asal will find this news story useful.