நள்ளிரவில் பேயை பார்த்து அலறி துடித்த ஆல்யா மானசா மற்றும் நிஷா... கடைசியில் நடந்தது என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த சீசனில் ஒரு வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷா "சில காரணங்களால் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது. எனினும் யார் மனதையும் புண்படுத்தாமல் விளையாடி முடித்தார்.

அதேபோல் நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. 

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா மற்றும் ஆல்யா மானசா இருவரும் பிரபல சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்துடன் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று தற்போது களேபரம் ஆகியுள்ளது. காட்டுக்குள் நள்ளிரவில் மூவரும் சமைத்துக் கொண்டிருந்த பொழுது அருகில் ஏதோ சத்தம் கேட்க ஆல்யா மானசா மற்றும் நிஷா நடுங்கி விட்டனர். பின்பு அந்த சத்தம் நெருங்க நெருங்க பேய் தான் என்று நினைத்து இருவரும் அலறித் துடிப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் கடைசியில் அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த ஒரு சிறிய பிராங்க் என்று தெரிந்த பின்பு ஆசுவாசம் அடைந்தார்கள். பார்க்க சுவாரசியமாக இருக்கும் இந்த வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் பேயை பார்த்து அலறி துடித்த ஆல்யா மானசா மற்றும் நிஷா... கடைசியில் நடந்தது என்ன..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nisha and alya manasa ghost video அலறி துடித்த ஆல்யா மானசா, நிஷா

People looking for online information on Alya Manasa, Nisha will find this news story useful.