அடக்கடவுளே! ‘ஒத்துமையா இருப்பாங்களே? என்ன ஆச்சு.?’ .. அனல் பறந்த நிரூப் - பிரியங்கா வாக்குவாதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஒன்றாக சுற்றுபவர்கள் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக்.

அண்மையில் கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் சில புகார்களை பிக்பாஸ் முன்னிலையில் வைக்கும் ஒரு டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் மைக்கை ஒழுங்காக மாட்டாதவர்கள் லிஸ்டில் பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரின் பெயரை பலரும் முன்மொழிந்தனர்.

இதேபோல் இரவில் தூங்காமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு பகல் நேரத்தில் தூங்கி பொழுதை கழிப்பவர்கள் லிஸ்டில் நிரூப் மற்றும் பிரியங்கா ஆகியோரின் பெயர்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்மொழிந்தனர். அந்த அளவுக்கு நிரூப் மற்றும் பிரியங்கா தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

காயின் டாஸ்கில் கூட இருவரும் குழுக்களாக இணைந்து காயின்களை எடுத்து வைத்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த காயின் டாஸ்க் குறித்த சூடான விவாதம் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே நடைபெற்றது.

அதன்படி கமல்ஹாசன் வார இறுதியில் இதுதொடர்பாக பேசியதை குறிப்பிட்டு பிரியங்காவிடம் நிரூப் கேட்க, பிரியங்கா தான் குழுவாக விளையாண்டதை ஒப்புக்கொள்கிறார். அதேசமயம் நிரூப், “ஆமாண்டி நீ குரூப்பாதான் ஆடுன.. நான் மூளையை கஷ்டப்பட்டு செலவு பண்ணி தனித்தனியாக ஒவ்வொரு காயினையும் எடுத்தேன்.. இதில் விளையாட்டை fair-ஆக விளையாண்டது யார், unfair-ஆக விளையாண்டது யார் என்று கேட்க பிரியங்காவுக்கு கோபம் வந்துவிட்டது.

இருப்பினும் நிரூப், பிரியங்காவிடம் சொல்லி சமாளித்து பார்க்கிறார். அதன்பிறகு அபிஷேக் எலிமினேஷன் ஆகிறாரா.. இல்லையா.. என்பதை பார்த்துவிட்டு பிறகு இதை பற்றி நாம் பேசிக்கொள்ளலாம் என்று பிரியங்கா சமாதானம் செய்து பார்க்கிறார்.

ஆனால் நிரூப், “அப்படியானால் இந்த கருத்துக்களை, தாமதமாக அந்த நேரத்தில் சொல்லி இருக்க வேண்டும்.. இப்போதே சொன்னதால் எனக்கு இப்போதே பதில் வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்று விட்டார். இவர்களின் சூடான விவாதம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போதும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் இப்படி மெல்ல பேசத் தொடங்கி, பின் மெதுமெதுவாக பரபரப்பான பேச்சுவார்த்தைக்குள் இறங்கியதும் ஒரு கணம் ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர்.

எனினும் இவர்கள் இருவரும் எப்போதும் போல் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் இருவருமே அடுத்த நிமிடம், அந்த விஷயத்தை மறந்து அடுத்த விஷயத்தை பேசிக் கொள்ளும் இயல்புதான். குறிப்பாக நிரூப் மிகவும் இயல்பாக இந்த வீட்டுக்குள் கோபத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறார் என்று ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய அன்பை கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே அபிஷேக் இரண்டாவதாக ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து நாடியா வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்னதாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிக்பாஸ் விட்டைவிட்டு வெளியேறியதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Niroop priyanka heat aggressive argument biggbosstamil5

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Priyanka will find this news story useful.