“நிரூப் ஹீரோ ஆயிட்ட!” - ‘அடிச்சான் பாரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்’ .. பிரபல EX போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 102வது நாள் எபிசோட் ஒளிபரப்பாகியுள்ளது.

Advertising
>
Advertising

கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே வந்து விட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. கடந்த வாரங்களில் தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்குமா? என்று சில ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

தாமரை வெளியேற்றம்

ஆனால், தாமரை எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டார். அவருடைய வெளியேற்றம் குறித்து வருத்தப்பட்ட கமல்ஹாசன், தானும் தாமரையை அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும் என்று இருந்ததாகவும், ஆனால் பலர் தாமரை வெளியேற வேண்டும் என்று முடிவு செய்து விட்டதாகவும், அவர்கள் தாமரையை வெளியேற்றியதற்காக மிகத் தாமதமாக வருத்தப்படலாம் என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

நாடியா, சுருதி வருகை

மேலும் தன்னுடைய ஏமாற்றத்தின் காரணமாக, தான் கொந்தளிப்பதகவும் கமல் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா, அமீர், நிரூப், ராஜூ, பாவனி உள்ளிட்டோர  இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களான நாடியா, சுருதி இருவரும் திடீரென போட்டியாளர்கள் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் கொடுத்து இந்த வீட்டுக்குள் வந்தனர்.

பாவனி ரியாக்‌ஷன்

அவர்களை பார்த்ததுமே பிரியங்கா, ராஜூ, அமீர் உள்ளிட்டோர் மிகவும் பரவசமாகி விட்டனர். குறிப்பாக பாவனியின் சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஏன் என்றால் பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி மிகவும் தன்னுடன் நெருக்கமாக உணர்ந்தது சுருதி மற்றும் மதுமிதா இருவரையும் தான். இவர்கள் இருவரையும் தான் மிகவும் மிஸ் பண்ணுவதாக பாவனி அடிக்கடி கூறி வந்தார். சுருதியை பார்த்ததும் பாவனி கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய்விட்டார்.

நிரூப் ஹீரோ ஆயிட்ட? - சுருதி

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அனைவரையும் நலம் விசாரித்த கையோடு சுருதி நிரூப்பை பார்த்தார். திடீரென தலை முடியைக் குறைத்து, ஹேர் கட் செய்து வேறொரு தோற்றத்தில் இருந்த நிரூப்பை பார்த்த சுருதி, நிரூப் வரும்போது வில்லன் மாதிரி இருந்ததாகவும், இப்போது ஹீரோ மாதிரி ஆகி விட்டார் என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

மேலும் பிரியங்கா, நிரூப் தனக்கு செயினை பரிசாக கொடுத்தது பற்றி கூற, சுருதி தனக்கும் பொங்கல்பரிசு வேண்டுமே என்று நிரூப்பிடம் செல்லமாக அடம் பிடிக்க்கிறார். மேலும் நிரூப்பிடம், ‘வேறு ஒரு மோதிரம் கையில் போட்டிருப்பாயே? அது எங்கே?’ என்றும் சுருதி கேட்கிறார். இப்படி நிரூப்பின் இந்த புது கெட்டப் அவரை ஒரு ஹீரோ போல தோற்றமளிக்க வைத்திருப்பது பற்றி சுருதி பேசியது வைரலாகி இருக்கிறது.

Also Read: அடடா.. பிக்பாஸ்ல அமீர் ஜெயிக்கணும்னு அவரது மொத்த குடும்பமே செய்த காரியம்! நெகிழ்ச்சி வீடியோ!

Niroop becomes hero now Popular ex contestant biggboss

People looking for online information on BiggBossTamil5 will find this news story useful.