அட.. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் இப்படி ஒரு புதுமையான விஷயமா..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அன்மையில் நிறைவடைந்தது. மேலும் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சூப்பர் ஹிட் அடித்தது. 

இதை தொடர்ந்து தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்போது முழு வீச்சில் ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே தற்போது படப்பிடிப்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒரு புதுமையான விஷயத்தை செய்துள்ளது படக்குழு. 

இதற்காக சித்த மருத்துவர் வீர பாபு என்பவரை வரவழைத்து, அவரது மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். பாண்டிச்சேரியில் நடந்து வரும் ஷூட்டிங்கில், அனைவருக்கும் காலை, மாலை என மூலிகை கசாயமும் வழங்கப்பட்டு வருகிறதாம். 

மாநாடு படக்குழுவினர் செய்துள்ள இந்த செயல், பாராட்டத்தக்க வன்னம் அமைந்திருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு குறித்து அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு படத்தில் புதுமையான பாதுகாப்பு | new safety measures taken in simbu venkat prabhu maanaadu shooting

People looking for online information on Maanaadu, Simbu, Str, Venkat Prabhu will find this news story useful.