அவரு போனதுக்கு அப்புறம் 'செஞ்சு' இருக்கலாமே... அப்படி என்ன அவசரம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வாரம் ரசிகர்கள் முன்பே கணித்தது போல பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் பாடியது தவிர அவர் பெரிதாக எதுவும் கண்டெண்ட் கொடுக்கவில்லை என்பது தான் அவரது வெளியேற்றத்திற்கான காரணமாக இருக்கலாம். 11 பேர் நாமினேஷனில் இடம் பெற்றதால் யார் வெளியேறுவார்? என ரசிகர்கள் தீவிரமாக விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கடந்த வாரம் ரேகா வெளியேறியது முன்பே தெரிந்தது போல இந்தமுறை வேல்முருகன் வெளியேற்றம் குறித்தும் முன்னரே தெரிந்து விட்டது. ஆஜீத், வேல்முருகன் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் சரியாக கணித்து இருந்தனர். அதன்படி ரொம்பவும் இழுக்காமல் நேரடியாக வேல்முருகன் வெளியேற்றத்தை அறிவித்து விட்டார்.

ஆனால் வேல்முருகன் பெயரை கமல் அறிவித்ததும் பாலாஜி செய்த செயல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது வேல்முருகன் முன்னர் வைத்தே ஆஜீத்தை அவர் கட்டிப்பிடித்து தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். வேல்முருகன் முன்னரே அவர் அப்படி செய்தது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் வெளியே போறதுக்குள்ள அப்படி என்ன அவசரம்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Netizens not liked Balaji's attitude in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.