பர்ஸ்ட் டைம் 'அவர' இப்படி பாக்குறோம்... ஷாக்கான ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனைவருக்கும் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பது போல நேற்று பிக்பாஸ் அனைவரையும் அன்புடன் அழைத்து வச்சு செய்து விட்டார். நீங்கள் இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள்? என்று பிக்பாஸ் கேட்க போட்டியாளர்கள் அனைவரும் ஆடு திருடியது போல முழித்தனர். முதலில் உள்ளே சென்றது ஜித்தன் ரமேஷ், தொடர்ந்து ஆஜீத், கேப்ரியலா, ஷிவானி, சோம், ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் சிக்கினர்.

இதைப்பத்தி யாரிடமும் மூச்சு விடக்கூடாது என, கண்டிப்பாக பிக்பாஸ் சொல்லி விட்டதால் அனைவரும் வெளியே வந்து கொரோனா டெஸ்ட் என்பது போல கதை விட்டனர். பிக்பாஸ் வரலாற்றில் பிக்பாஸ் இப்படி நீண்ட நேரம் பேசியது, போட்டியாளர்களிடம் கண்டிப்பு காட்டியது ஆகியவை இதுதான் முதல்முறையாக இருக்கும். குறிப்பாக சோம், நிஷா இருவரையும் எண்ணெய் சட்டியில் போட்டது போல வறுத்து எடுத்து விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கே இப்படின்னா இன்னும் அனிதா, பாலாஜி, ஆரி, அர்ச்சனா, ரியோ, சனம் என மொரட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்கள் பிக்பாஸிடம் சிக்க மாட்டார்கள். பிக்பாஸ் தான் இவர்களிடம் சிக்கிக்கொண்டு முழிக்க போகிறார் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அனிதா, பாலாஜி ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளைக்கு என்ன நடக்க போகுதோ?

தொடர்புடைய இணைப்புகள்

Netizens eagerly Waiting for Today Episode in Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.