நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா?... சந்தேகத்தை கிளப்பிய PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பூஜையோடு துவங்கியது. அந்த படப்பிடிப்பு பூஜையில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து  தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.

'நானும் ரவுடிதான்' படத்திற்கு பிறகு நயன்தாராவை, விக்னேஷ் சிவன் இயக்கும் படமாக இது இருக்கிறது என்று தெரிகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் காதலிக்கின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் காதலை அறிவித்த நாளிலிருந்து, அவர்கள் திருமணத்திற்காக கோலிவுட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது  இருவரும் தங்களது ஸ்பெஷலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதும், அவைகள் வைரலாவதும் வழக்கம். அந்த வகையில் இயக்குநர் சந்தோஷ் சிவன் தற்போது ஒரு ஸ்பெஷலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்குத் தலைப்பாக "விரலோடு உயிர் கூட கோர்த்து" என்று கூறியுள்ளார். இந்த வரிகளையும், நயன் அணிந்திருந்த பெரிய மோதிரத்தையும் பார்த்த பலரும் தங்கள் பேவரைட் பிரபலங்கள நயன்தாரா மற்றும் சந்தோஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் அவர்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா?... சந்தேகத்தை கிளப்பிய PHOTO! வீடியோ

Tags : Nayanthara

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara and Vignesh Shivan got engaged? விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோ

People looking for online information on Nayanthara will find this news story useful.