"நவரசா"-"துணிந்த பின்" படப்பிடிப்பை 6 நாளில் முடித்தோம்! - இயக்குநர் சர்ஜுன் KM சுவாரஸ்ய பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"நவரசா" மனித  உணர்வுகளில்   9 ரசங்களான,  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு,  ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும்  ஆந்தாலஜி திரைப்படமாகும்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, "நவரசா" உருவாகியுள்ளது.

Justickets  நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை  தயாரித்துள்ளனர்.  

தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம், அனைத்து தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் சர்ஜுன் KM, விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "துணிந்த பின்" பகுதியினை இயக்கியுள்ளார். 

"துணிந்த பின்" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் சர்ஜுன் KM கூறியதாவது...

இப்படத்தின் தயாரிப்பு குழுவும், நடிகர்கள் குழுவும் படப்பிடிப்பிற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இத்தனை எளிதாக "துணிந்த பின்" பகுதியினை படம்பிடித்திருக்க முடியாது.

படத்தின் மொத்த படப்பிடிப்பும், தென்காசி அருகிலுள்ள அச்சன் கோவிலில், மழை தூரும் மலைப்பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு தளமே   குழுவினர் அனைருக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்திருந்தது. மொத்த படப்பிடிப்பையும் 5 நாட்களில் முடித்து, விட்டுப்போன காட்சிகளை ஒரு நாளில் எடுத்து முடித்து விட்டோம். இப்படம்  அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள  "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Navarasa Atharva km sarjun movie shooting just six days

People looking for online information on Atharva, Atharvaa Murali, Mani Ratnam, Navarasa will find this news story useful.