"மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

57 வயதாகும் நடிகர் மயில்சாமி திடீரென மரணம் அடைந்தது, அனைவரையும் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் Throwback வீடியோ!!

தமிழ் சினிமா திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்த மயில்சாமி, நடிப்பைத் தாண்டி உதவி என யார் வந்து கேட்டாலும் தயக்கம் இல்லாமல் செய்யக்கூடியவர். தன்னிடம் பணம் இல்லாத சூழலிலும் அடுத்தவர்களிடம் வாங்கியாவது தன்னிடம் உதவி என்று கேட்டு வந்த நபர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் பெரும் உள்ளம் கொண்டவர் மயில்சாமி.

அப்படி இருக்கையில், அவரது திடீர் மறைவு சினிமா பிரபலங்கள் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. முன்னதாக சிவராத்திரியன்று இரவில், கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் டிரம்ஸ் சிவமணியுடன் பாட்டு பாடியும் பக்தியுடன் மயில்சாமி இருந்து வந்த சூழலில், காலையில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், மயில்சாமி மறைவு குறித்து பேசி இருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ், "ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஆடியோ பங்சனில் அவரை சந்தித்திருந்தேன். 'மாப்ள எப்படி இருக்கே. நல்ல இருக்கியா?. இந்தா வரேன்னு' சொல்லிட்டு போனாரு. அப்ப தெரியாது, அதுதான் கடைசி சந்திப்பா இருக்கும்ன்னு.

அவரு தீவிர சிவபக்தர்ங்க. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் திருவண்ணாமலை கிரிவலம் போய்டுவாரு. அது மாதிரி கோவில்ல நின்னு வாய்விட்டு சிவன் பாடல்கள் எல்லாம் பாடுவார். அதெல்லாம் பெரிய குவாலிட்டி. ஒரு நடிகன் கோயில்ல போய் பாட்டெல்லாம் பாடலாமா வேண்டாமான்னு யோசிக்க மாட்டார். அங்க போனா அந்த பக்தனா மாறிடுவாரு. அப்படியே அங்கப்பிரதஷ்ணம் எல்லாம் பண்ணுவாரு. எனக்கு இதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.

இது பத்தி கேட்டா 'மாப்பிள்ளை சிவன், நமக்கெல்லாம் அப்பன்' அப்படின்னு சொல்லுவாரு. அதெல்லாம் நினைச்சு பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என தெரிவித்தார். அதே போல, கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு செய்த உதவி பற்றியும் நட்டி நட்ராஜ் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, ஷூட்டிங்கின் போது மயில்சாமியின் நடிப்பு பற்றியும் ஏராளமான விஷயங்களை எடுத்துரைத்திருந்தார்.

Also Read | மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம்.. "அதுல இருந்தது மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு"

"மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Natty about Mayilsamy death share his last meet with actor

People looking for online information on Mayilsamy, Natty about Mayilsamy death, Natty Natraj will find this news story useful.