நான் உங்காளுங்க! பிறந்து 20 வருசம் தமிழ் நாட்ல தான் இருந்தேன்! - அல்லு அர்ஜூன் EXCLUSIVE பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertising
>
Advertising

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் Seshachalam Hills சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார், அதில் படத்தில் பஹத் பாசில் எதனால் நடிக்க வந்தார் என்றும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சென்னை வாழ்க்கை பற்றியும், பிறந்து 20 வருடம் சென்னையில் இருந்தது குறித்தும் பேசியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் - சுகுமார் கூட்டணி குறித்தும், தமிழக - ஆந்திர எல்லையில் நிகழ்ந்த  செம்மரக்கடத்தல் சம்பவங்கள் குறித்தும் புஷ்பா படம் பேசியுள்ளதாக வீடியோவில் அல்லு அர்ஜூன் பேசியுள்ளார்.  முழு வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் உங்காளுங்க! பிறந்து 20 வருசம் தமிழ் நாட்ல தான் இருந்தேன்! - அல்லு அர்ஜூன் EXCLUSIVE பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nanum Tamil taanga Allu Arjun Exclusive Interview

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜூன், சமந்தா, சுகுமார், செம்மரக்கடத்தல், தமிழ், திருப்பதி, தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா, ராஷ்மிகா, Pushpa, Pushpa The Rise, Rashmika, Samantha will find this news story useful.