"வயத்துல ஏதோ தழும்பு மாதிரி இருக்கே??.." ரசிகரின் கேள்விக்கு கூலாக நந்திதா சொன்ன பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போதைய காலகட்டத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

தொடர்ந்து தங்களின் திரைப்படம் குறித்த அப்டேட்களும், போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இது போக, ரசிகர்களுடன் கலந்துரையாடுவதும் உண்டு. அப்படி உரையாடும் போது, சில நேரம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, நெட்டிசன்கள் முன்னிலையில் துணிச்சலாகவும் சில நடிகைகள் பதில் சொல்வார்கள்.

அந்த வகையில், பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சொன்ன பதில், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ப. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நந்திதா ஸ்வேதா.

குமுதா ஹேப்பி அண்ணாச்சி..

இதன் பின்னர், எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நந்திதா நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில், குமுதா என்னும் கதாபாத்திரத்தில் தோன்றிய நந்திதாவுக்கு மிகப் பெரிய அளவில் புகழ் கிடைத்திருந்தது.

இதற்கு மத்தியில், சில தெலுங்கு திரைப்படங்களிலும் நந்திதா நடித்து வந்தார். கடைசியாக, செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நந்திதா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  பிசியாக நடித்து வருகிறார் நந்திதா.

வயத்துல என்ன அது மார்க்?

சினிமா ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருந்து வருபவர் நந்திதா ஸ்வேதா. இந்நிலையில், சமீபத்தில் நடிகை நந்திதா பகிர்ந்திருந்த ஒரு புகைப்படத்தைக் கண்டு ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியும், அதற்கு நந்திதா சொன்ன பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கருப்பு உடை ஒன்றில் இருக்கும் புகைப்படத்தினை நந்திதா பகிர்ந்திருந்தார். அதில், அவரது வயிற்றுப் பகுதியில் இருக்கும் காயம் போல ஏதோ ஒன்றை கவனித்த ரசிகர் ஒருவர், "உங்களது வயிற்றிற்கு என்ன ஆனது?. எதோ மார்க் அங்கே உள்ளது?" என கேள்வி கேட்டிருந்தார்.

அந்த மார்க் இப்படி தான் வந்துச்சு..

இதற்கு பதிலளித்த நந்திதா, "எனது வயிற்றுப் பகுதியில் இருக்கும் மார்க் பற்றி கேட்கும் அனைவருக்கும்... Dhee என்னும் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நான், சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை அங்கு உட்கார்ந்திருக்கிறேன். அதன் இடைவேளை சமயத்தில் தான் அந்த போட்டோஷூட்டை நான் நடத்தி இருந்தேன்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து உருவான Skirt மார்க் தான் அது. தழும்போ அல்லது வேறு ஏதும் கிடையாது. ஒரு வேளை அது தழும்பாகவோ அல்லது காயமாகவோ இருந்தாலும் கூட அதை பற்றிக் கவலைப்பட தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளார். நந்திதாவின் இந்த பதில், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Nandita swetha reply to fans question about her stomach

People looking for online information on Attakathi, Itharku Thaane Aasai Pattai Balakumara, Nandita Swetha, Viral Reply will find this news story useful.