நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடம் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் இடத்தை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

தற்போது நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலும் இந்த பள்ளியில்தான் நடந்தது.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Nadigar Sangam elections St.Ebas Higher Secondary School in Mylapore

People looking for online information on Nadigar Sanagam Election, Vishal will find this news story useful.