‘நாய் சேகர்’-ஐ அறிமுகப்படுத்திய படத்தின் அடுத்த பார்ட்! இயக்குகிறார் ‘தல’ பட இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி நடிப்பில், 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தலைநகரம்.

இயக்குனராக 90-களில் இருந்தே, குடும்ப கமர்சியல் திரைப்படங்களை இயக்கி பல வெற்றிப் படங்களை தந்தவர் சுந்தர் சி. தற்போதும் அரண்மனை 3-ஆம் பாகம் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். முன்னதாக கலகலப்பு படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி பெற்றார்.

இவருடைய நடிப்பில் 2006-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தலைநகரம். இந்த திரைப்படத்தில் சுந்தர் சி.யுடன் வடிவேலு, போஸ் வெங்கட், பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பக்காவான காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

‘நாய் சேகர்’ என்று வடிவேலு தனக்குத் தானே புனை பெயர் சூட்டிக்கொண்ட ஒரு காட்சியும் இந்த திரைப்படத்தில் தான் இடம்பெறும். இதனை தொடர்ந்து தான் ‘நாய் சேகர்’ என்கிற கேரக்டர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

இதனிடையே தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிக்கும் புதிய படத்துக்கு ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பு வைக்கப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த திரைப்படத்தை லைகா தயாரிப்பில் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் நாய் சேகர் என்கிற தலைப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதனிடையே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகர் சதீஷ் நடிக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார். அதில், வடிவேலு ரசிகனாக ‘நாய் சேகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் குறிப்பிடும் பொழுது சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படம் கிட்டத்தட்ட எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், படம் முழுவதும் அந்த ‘நாய் சேகர்’ என்கிற கேரக்டரை மையமாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வடிவேலு அவர்களிடம் தெரிவித்த போது, வடிவேலு அவர்கள் வேற தலைப்பின் செல்வதாக முடிவு எடுத்ததாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி, இன்றைய சூழலில் ‘நாய் சேகர்’ என்கிற என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆக இருக்கிறது என்று சொன்னால், அதற்கு காரணம் அந்த வார்த்தை உருவான ‘தலைநகரம்’ எனும் திரைப்படம். இந்த தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தான் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி படு டிரெண்டிங்கில் உள்ளது.

அதன்படி சுந்தர் சி நடிப்பில் உருவாகும் தலைநகரம் இரண்டாம் பாகம் திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் தயாரிப்பில் - SM பிரபாகரன் மற்றும் இயக்குநர் VZ துரை தயாரிக்க, RS வெங்கட் மற்றும் APV மாறன் இணைந்து தயாரிக்கின்றனர். VZ துரை இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

VZ துரை மற்றும் சுந்தர்.சி இருவரும் ஏற்கனவே இருட்டு என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதனிடையே அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வந்த இயக்குநர் VZ துரை, ஊரடங்கு முடிந்து  தலைநகரம் 2 படத்தை துவங்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் தலைநகரம் படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு, இந்த தலைநகரம் 2-ஆம் பாகத்தில் நடிப்பாரா என்பது தெரிய வரவில்லை.

தல அஜீத்குமார் நடிப்பில் தல அஜீத், ஜோதிகா, ரகுவரன் நடித்த முகவரி திரைப்படத்தை இயக்கியவர் தான்  VZ துரை. தொடர்ந்து காதல் சடுகுடு, தொட்டி ஜெயா உள்ளிட்ட பல படங்களை இயக்குநர்  VZ துரை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘செண்பகமே..’.. எத்தன வருஷம் ஆச்சு இவங்கள பாத்து.. இப்ப வேற மாரி எண்ட்ரி கொடுக்க போறாங்க.. மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Naai Sekar character fame Thalainagaram sequel Starring Sundar C

People looking for online information on Naai Sekar, Sundar C, Suraaj, Thalainagaram, Thalainagaram2, Vadivelu, VZ Dhorai will find this news story useful.