அடக்கடவுளே! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் & முல்லைக்கா இப்படி ஒரு சோதனை? கலங்கும் ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.

Advertising
>
Advertising

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போதுதான் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் மிகவும் சிரமப்பட்டு ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை தொடங்கினார்கள்.

இதில் மூத்த அண்ணன் மூர்த்தி அவருடைய மனைவி தனம், அடுத்த அண்ணன் கதிர் அவருடைய மனைவி முல்லை, அடுத்த அண்ணன் ஜீவா அவருடைய மனைவி மீனா, கடைசி தம்பி கண்ணன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும், அவரவர் மனைவிகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில், கதிரின் மனைவி முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா. அவரின் மறைவுக்குப் பிறகு முல்லை கேரக்டர் மாற்றப்பட்டும், அந்த கேரக்டரின் தன்மை குறையாமல் இருந்து வருகிறது.

உருக வைக்கும் புதிய ப்ரோமோ

இந்நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி, அதன் ரசிகர்கள் மத்தியில் சற்று உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோவில், முல்லை இருக்கும் இடத்தை தேடி கதிர் அங்குமிங்குமாக அலைகிறார். அந்த சமயத்தில் குளம் ஒன்றின் அருகே தனியாக இருந்து அழுது கொண்டிருக்கிறார் முல்லை.

கதறி அழும் முல்லை

இதனைக் கண்டதும் அருகில் சென்ற கதிர், அவரை வருத்தத்துடன் கட்டியணைத்துக் கொள்கிறார். "என்ன முல்லை, உன்ன எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா?" என கதிர் கேட்க, அப்போது அழுது கொண்டே இருக்கும் முல்லை, கதிரிடம், "மறச்சுடீங்கள்ல. எனக்கு குழந்தையே பொறக்காதுன்னு சொல்றாங்க, நான் எதுக்கு உங்களுக்கு?" என கேட்கிறார்.

நான் இருக்கேன் உனக்கு..

இதற்கு அடுத்து பேசும் கதிர், "குழந்தையா எனக்கு முக்கியம். நீ தான் எனக்கு முக்கியம். என்ன பத்தி நீ யோசிக்கவே மாட்டியா?. நான் இருக்கேன் முல்லை" என சமாதானப்படுத்தி, முல்லையை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் கதிர். அங்கே குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையில் கண்ணீருடன் பேசும் முல்லை, "எனக்கு கொழந்தையையே பொறக்காதுனு டாக்டர் சொல்லிட்டாங்கம்மா" என கூறிய படியே, தொடர்ந்து அழுகிறார்.

இதனைக் காணும் குடும்பத்தினர் அனைவரும் முல்லையின் நிலையை நினைத்து அழத் தொடங்க, என்ன ஆனாலும் மனைவியுடன் தான் இருப்பேன் என அவரை அணைத்துத் தேற்றுகிறார் கதிர். இது தொடர்பான ப்ரோமோக்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை மனம் உருக வைத்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mullai starts to cry kathir supports him in pandian stores

People looking for online information on Kathir, Mullai, Pandian stores, Pandian Stores Promo will find this news story useful.