கதிர் - முல்லை விஷயத்தில்.. மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு.. பரபரப்பில் PANDIAN STORES குடும்பத்தினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிக முக்கியமான ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.

Advertising
>
Advertising

கைல ஸ்க்ரிப்ட் பேப்பர்.. உள்ளுக்குள்ள நிறைய Confusion.. வைரலாகும் மாளவிகா மோகன் இன்ஸ்டா ஸ்டோரி

இந்த தொடர், அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடராகும். பல நாட்களாக கஷ்டப்பட்ட அண்ணன் தம்பிகள், தற்போது தான் மிகவும் சிரமப்பட்டு ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை தொடங்கினார்கள்.

மூத்த அண்ணன் மூர்த்தி அவருடைய மனைவி தனம், அடுத்த அண்ணன் கதிர் அவருடைய மனைவி முல்லை, அடுத்தது ஜீவா அவருடைய மனைவி மீனா, கடைசி தம்பி கண்ணன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும், அவரவர் மனைவிகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

மனமுடைந்த முல்லை

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், தனியாக இருந்த முல்லையைத் தேடிச் சென்று ஆறுதல் சொன்ன கதிர் தொடர்பான காட்சிகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பது, முல்லைக்கு தெரிய வர, அவர் மனமுடைந்து கதறி அழுதது தான்.

வேதனையில் குடும்பத்தினர்

அவருக்கு பக்கபலமாக கணவர் கதிரும், குழந்தையை விட நீ தான் முக்கியம் எனக்கூறி முல்லையை தேற்றுகிறார். தொடர்ந்து, முல்லையை வீட்டிற்கு கதிர் அழைத்துச் செல்லவே, அங்கு அனைவர் முன்னிலையிலும் கதறி அழுகிறார் முல்லை. இதனைக் காணும் குடும்பத்தினரும் கடும் வேதனைக்குள் ஆகின்றனர்.

இது தான் ஒரே வழி..

இந்நிலையில், மூத்த அண்ணன் மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு குறித்து, ப்ரோமோ ஒன்று புதிதாக வெளியாகியுள்ளது. தனம், கதிர் ஆகியோர் முல்லையை மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு முல்லையை பரிசோதித்த மருத்துவர், "முல்லையால் இயற்கையாக கருத்தரிக்க முடியாது. ஆனால் செயற்கை முறையில், கர்ப்பம் ஆகலாம். அந்த சிகிச்சைக்கு பெயர் தான் IVF" என கூறுகிறார்.

மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு?

இது பற்றி குடும்பத்தினர் முன்னிலையில் பேசும் மூர்த்தி, "முல்லைக்கு ஒரு சில சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி மருத்துவர் பேசி உள்ளார். அதனை மேற்கொள்ள வேண்டி செலவு அதிகமாகும். இதனால், நாம் வீடு கட்டும் விஷயத்தை மட்டும் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என யோசித்துள்ளேன்" எனக்கூற, அங்கிருந்த மீனா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் முகம் மாறிப் போகிறது.

இதனால், மூர்த்தியின் முடிவை அனைவருமாக சேர்ந்து ஏற்றுக் கொள்வார்களா அல்லது, முல்லை விவகாரத்தில் முடிவு எட்ட, தடையாக இருப்பார்களா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

"ஜாலியோ ஜிம்கானா".. ஆட்டத்தில் செம Tough கொடுக்கும் Bigg Boss சென்றாயன்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Moorthy decision after kathir and mullai hospital visit

People looking for online information on Kathir, Moorthy, Mullai, Pandian stores, Pandian stores serial, Pandian Stores Serial Episode, Pandian Stores Serial Promo, Vijay Television will find this news story useful.