செல்வராகவன் இயக்கத்தில் சோழர்கள் பற்றிய வரலாற்று நாவல்?.. மோகன் ஜி பதிவிட்ட வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன்.

Advertising
>
Advertising

Also Read | 'உலகளாவிய உச்சபட்ச அங்கிகாரம்'.. ஆஸ்கார் விருது பெற்ற RRR பாடல் குறித்து கமல்ஹாசன் ட்வீட்!  

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார். இதில், இயக்குனர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி, தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "சோழர் வரலாற்றில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தை, சிறிய பொருட்செலவில் இரண்டு மணி நேர திரைப்படமாக எடுக்க ஆசை..

Images are subject to © copyright to their respective owners.

வரலாற்று ஆவணங்களுடன் சேர்ந்த நிகழ்வோ அல்லது கற்பனை கதையாகவோ உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் அதற்கான அங்கிகாரம் தரப்படும்.. Gmfilmcorporation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..." என பதிவிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில் ரசிகர்கள் பலர் கருத்துக்களை முன் வைத்தனர். ஒரு ரசிகர், "உடையார் நாவலை அப்படியே கொஞ்சம் விரிவாக எடுத்தீங்கனா  நல்லாருக்கும்" என கமெண்ட் செய்தார். இதற்கு பதில் அளித்த மோகன் ஜி, "இயக்குனர் செல்வராகவன் சார் உடையார் நாவலை விரைவில் படமாக்கலாம்" என பதில் அளித்துள்ளார்.

Also Read | 'தங்கலான்' ஷூட்டிங்கில் மாளவிகா மோகனன்.. சீயான் விக்ரம் எடுத்த சூப்பர் போட்டோ! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G about Selva Raghavan making udaiyar novel

People looking for online information on Mohan g, Selvaraghavan, Udaiyar novel will find this news story useful.