அமைச்சர் கடம்பூர் ராஜு ., தியேட்டர்கள் திறப்பது பற்றி கொடுத்த பளீச் தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறப்பது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சினிமாத்துறைச் சார்ந்த வியாபாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து, சினிமா தியேட்டர்கள் இயங்க தொடங்கி இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் எப்போது தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் எனும் கேள்விக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''தமிழகத்தில் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பில்லை. வெளிநாட்டில் இருப்பது போல சமூக இடைவெளியை கடைபிடித்து தியேட்டர்கள் நடத்தினால், அது அதன் உரிமையாளர்களுத்தான் நஷ்டம். இதுகுறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, முடிவு எடுக்கப்படும்'' என அவர் தெரிவித்தார்.  

தொடர்புடைய இணைப்புகள்

சினிமா தியேட்டர்கள் திறப்பு பற்றி அமைச்சர் பளீச் | Minister Kadambur Raju opens on Re Opening of Cinema Theatres after Coronavirus Lockdown

People looking for online information on China, Cinema Theatres, Coronavirus, Minister Kadambur Raju will find this news story useful.