‘ஓ சொல்றியா’ HIT-ஐ தொடர்ந்து... இப்படி ஒரு படமா? ஆண்ட்ரியாவின் புதிய அவதாரம்! இந்தியாவிலேயே FIRST TIME!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் முதல் கடல்கன்னி படத்தில் கடல் கன்னியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.

Advertising
>
Advertising

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படமான இந்த கடல்கன்னி படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதுடன், கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகையும் இவர்தான் என்கிற சிறப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகை சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் (DINESH SELVARAJ) டைரக்ட் செய்கிறார். இவர், ஏற்க்னவே ‘துப்பாக்கி முனை’ என்கிற திரைப்படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022-ஆம் ஆண்டு சம்மர் நேரத்தில் இப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.  இப்படத்தின் ஒளிப்பதிவை பால சுப்ரமணியெம், மேற்கொள்ள, கிராஃபோர்ட் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

Suorce: ஜான்சன், PRO

Also Read: "அழக பாத்து நின்னுட்டானோ?.. நைட்டில அண்ணி எப்படி?”.. கொழுந்தனிடம் பல்பு வாங்கிய மீனா!

தொடர்புடைய இணைப்புகள்

Mermaid Movie soul-stirring fantasy andrea starring Indias

People looking for online information on Andrea, Andrea Jermiah, Indias First Mermaid Movie, Oh Solreya mama Oh Oh Solreya, Oo Solreya Mama, Oo Solreya mama Oo Oo Solreya, Oo Solriya mama Oo Oo Solriya, Pushpa The Rise, Samantha, Soul stirring fantasy will find this news story useful.