"நீங்க எங்களுக்கு கிடைச்ச".. மனம் உருகிய நடிகை 'மீனா'.. கண் கலங்கிய ரசிகர்கள்.. காரணம் என்ன??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் நடிகை மீனா.

Advertising
>
Advertising

Also Read | Breaking : லாரன்ஸ் - வடிவேலு காம்போவில் 'சந்திரமுகி 2'.. ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்

தொண்ணூறுகளில், தென் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் எனபவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில், நுரையீரல் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

உடைந்து போன மீனா

இந்த சம்பவம், மீனாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரை உலகினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், குஷ்பு, ரம்பா, சினேகா, கலா மாஸ்டர், சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து தங்களின் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

மேலும், கணவரின் இறுதி சடங்கின் போது, கண்ணீர் விட்டு துடித்த மீனாவைக் கண்டு பலரும் மனம் உடைந்து போனார்கள். இதனைத் தொடர்ந்து, தனது கணவர் மறைவுக்கு பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கோரிக்கைகள் மற்றும் நன்றிகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, மீனா பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று, மீண்டும் பலரையும் கலங்கச் செய்துள்ளது. முன்னதாக, மீனா மற்றும் வித்யாசாகர் ஆகியோர், திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அப்படிப்பட்ட நேரத்தில் கணவர் அருகே இல்லை என்பதால், நிச்சயம் மீனா நிலை குலைந்து போயிருப்பார்.

கணவரை நினைந்து உருகிய மீனா

இதனிடையே, தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நடிகை மீனா, "நீங்கள் எங்களுக்கு கிடைத்த அழகான வரம். ஆனால், எங்களை விட்டு சீக்கிரம் பிரிந்தும் போனீர்கள். என்றென்றும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள். உலகெங்கிலும் இருந்து, எங்களுக்கு அன்பும், பிரார்த்தனைகளையும் செய்த லட்சக்கணக்கான நல்லுள்ளங்களுக்கு நானும், எனது குடும்பத்தினரும் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். எங்களுக்கு அது நிச்சயம் தேவைப்பட்டது.

எப்போதும், எங்களிடம் அன்புடனும், அக்கறையுடனும், ஆதரவுடனும் அன்பை பொழிந்து கொண்டே இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கிடைத்தததற்கு நன்றிக்குரியவர்களாக இருப்போம். நாங்கள் அன்பை உணர்கிறோம்" என மீனா தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவின் கீழ், ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | சென்னையில் அஜித் நடிக்கும் 'AK 61' படத்தின் படப்பிடிப்பு.. ரசிகர்களுடன் H. வினோத் & TEAM! வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Meena instagram post with her husband photo makes emotional

People looking for online information on Meena, Meena Husband, Meena instagram post will find this news story useful.