"கடைசியா அப்பா ஏதாவது சொன்னாரா?".. மயில்சாமி மகன்கள் சொன்ன விஷயம்!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமி கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், சினிமா பிரபலங்களை தாண்டி பொது மக்கள் பலரையும் கூட கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது ..? உடைக்கும் அவரது மகன் யுவன்..

சினிமாவில் பெரும்பாடு பட்டு, தனக்கென ஒரு இடத்தை மயில்சாமி பிடித்துக் கொண்ட சூழலில், அவர் காமெடியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த பல காட்சிகள் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காதவை. சிறந்த நடிகர் என்பதை தாண்டி, யாராக இருந்தாலும் உதவி என கேட்டு வந்தால், தன்னிடம் இருப்பதையும் கொடுத்து அனுப்பும் குணம் படைத்தவர் தான் மயில்சாமி.

தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும் கூட, யாரிடம் கேட்டாவது கூட தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்து விடுவார். அப்படி நல்ல மனம் படைத்த மயில்சாமி, தீவிர சிவபக்தன் ஆவார். திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி செல்லும் மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலில் சிவராத்திரி தினம் இரவு முழுவதும் இருந்து விட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய பின்னர் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர், அமைச்சர் உதயநிதி என ஒட்டுமொத்த திரை உலகமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர். மயில்சாமி மறைந்து சில தினங்கள் கடந்தாலும் தொடர்ந்து அவர் இல்லை என்ற விஷயம் பலரையும் வாட்டி தான் வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது தந்தையின் இறப்பு குறித்து பரவி வரும் வதந்திக்கு அவரது மகன்கள் முற்றுப்புள்ளி வைத்து உண்மையில் நடந்த சம்பவத்தையும் எடுத்து விளக்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மயில்சாமி இறப்பிற்கு பிரபலங்கள் நேரில் வராமல் போனதற்கான காரணங்கள் பற்றியும் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர், தந்தை மயில்சாமி கடைசியாக சொன்ன விஷயங்கள் குறித்த கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் எழுப்பி இருந்தனர். சினிமாவில் முன்னேறுவது பற்றியும் ஏதாவது பகிர்ந்து கொண்டாரா என்றும் கேள்வி கேட்கப்பட, இதற்கு பதிலளித்த அவரது மகன் அன்பு, "அப்பா சினிமால சேர்த்து விடும்போது சொன்னது என்னன்னா உனக்கு நான் வழியை காமிச்சுட்டேன். இதான் சினிமா, நான் எப்படி கஷ்டப்பட்டு வந்தேனோ நீங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி கஷ்டப்பட்டு வாங்க. எப்பவுமே பொய் சொல்லாதீங்க உண்மையா இருங்கன்னு மட்டும் சொல்லி இருக்காரு. இதை நாங்க ஃபாலோ பண்றோம். அப்பாவுக்கு உதவி பண்ணி எங்களை சினிமால கொண்டு போணும்னு விரும்பல" என தெரிவித்தார்.

Also Read | மயில்சாமி இறப்பில் 10 செகண்ட் மட்டுமே அழுத அவரது மகன்.. அருண் விஜய்க்கு போன் செய்து உருக்கம்..

"கடைசியா அப்பா ஏதாவது சொன்னாரா?".. மயில்சாமி மகன்கள் சொன்ன விஷயம்!!.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy sons about his father advice to success in cinema

People looking for online information on Mayilsamy, Mayilsamy sons will find this news story useful.