"மயில்சாமி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இப்டி தான் இருக்குமா?".. மனம் குளிர வெச்ச சம்பவம்!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக விளங்கிய மயில்சாமியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மயில்சாமி இறப்பில் 10 செகண்ட் மட்டுமே அழுத அவரது மகன்.. அருண் விஜய்க்கு போன் செய்து உருக்கம்..

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மயில்சாமி, தீவிர சிவ பக்தனாகவும் இருந்து வந்தார். அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மயில்சாமி, தான் உயிரிழப்பதற்கு முன்பு வரை கூட சிவபெருமானை வழிபட்டு கொண்டிருந்தார்.

சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலில், அதிகாலை மூன்று மணி வரை இருந்த மயில்சாமி, மீண்டும் வீட்டுக்கு வந்த சமயத்தில் தான், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார். அவரது மறைவால் திரை பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் பலரும் கூட கலங்கி போயிருந்தனர்.

நடிகர் என்பதைத் தாண்டி, தன்னிடம் உதவி என யார் வந்து நின்றாலும் அவருக்காக அனைத்தையும் செய்யக் கூடிய குணம் படைத்தவர் மயில்சாமி. அவரால் ஏராளமான மக்கள் பயன்படவும் செய்துள்ளனர். தான் வாழ்ந்த கொஞ்ச காலத்தில் சிறந்த மனிதராக வாழ்ந்து விட்டு மறைந்து போயுள்ளார் மயில்சாமி.

இந்த நிலையில், மயில்சாமியின் மகனான யுவன், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தந்தையின் மரணம் குறித்தும், அதற்கு முன்பு அவருடனான பிணைப்பு குறித்தும் ஏராளாமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது மயில்சாமி வீட்டில் முகப்பு பகுதியிலேயே பூஜை அறை இருந்தது பற்றி பேசிய அவரது மகன் யுவன், "அவர் சாமி கும்பிடுறதால மட்டும் இல்லாம, நிறைய பேர் கொடுக்கறது எல்லாம் இங்கதான் நிரம்பி இருக்கும். அதனால நாங்களும் இங்க வந்து கும்பிட ஆரம்பிச்சிட்டோம். தினமும் இங்க பூவெல்லாம் போட்டு இதை அரேஞ்ச் எல்லாம் பண்ணி வைக்க ஆளுங்க எல்லாம் இருக்காங்க. இது முழுக்க சாமி ரூம் மாதிரி செட்டப் ஆயிடுச்சு.

இதுக்கு அப்புறம் ஒரு சைடு அப்பாக்கு புடிச்ச மாதிரி சாமி போட்டோவும், இன்னொரு பக்கம் அப்பாவோட போட்டோ எல்லாம் ஃபிரேம் பண்ணி வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்" என தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் உடன் மயில்சாமி இருக்கும் போட்டோ குறித்தும், எம்ஜிஆர் போட்டோ பெரிதாக இருப்பது பற்றியும் மற்றும் தாத்தா, பாட்டியின் புகைப்படங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை மயில்சாமி மகன் யுவன் பகிர்ந்து கொண்டார்.

Also Read | அப்பா குடிச்சதுனால தான் இப்படி ஆகிடுச்சா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

"மயில்சாமி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இப்டி தான் இருக்குமா?".. மனம் குளிர வெச்ச சம்பவம்!!.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy house entrance filled with god photos and idols

People looking for online information on Mayilsamy, Mayilsamy house will find this news story useful.