பாலிவுட் நடிகருக்கு மயில்சாமி கொடுத்த தங்க செயின்.. அப்போ வீட்டுல நடந்தது இதான்.. மகன் OPEN TALK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக விளங்கி இருந்த மயில்சாமி, சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கதை சொல்றப்போ லேடி கெட்டப் பத்தி சொல்லவே இல்லயா?"😄 பஹீரா பட சீக்ரெட்ஸ்!!

நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராகவும் இருந்த மயில்சாமி, தன்னாலான உதவியை பலருக்கும் செய்துள்ளார்.

அதே போல, தீவிர சிவ பக்தனாக இருந்த மயில்சாமி, தான் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கூட, சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானை வணங்கிய வண்ணம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மயில்சாமியின் மகன் யுவன், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தந்தை மயில்சாமி குறித்து பல்வேறு கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, தமிழக மக்களுக்கு ஒருமுறை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உதவி செய்ததன் பெயரில் மயில்சாமி தனது எம்ஜிஆர் பொறிக்கப்பட்ட பெரிய டாலர் செயின் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். இதுகுறித்து மறைந்த நடிகர் விவேக் கூட ஒருமுறை மேடையில் பேசி இருந்தார்.

தந்தை செயினை எடுத்து விவேக் ஓபராய்க்கு கொடுத்தது பற்றி தற்போது பேசிய மயில்சாமி மகன் யுவன், "அந்த செயின் வயிறு வரைக்கும் வரும். அந்த செயின் எட்டு பவுன், டாலர் ரெண்டு பவுன்னு மொத்தமா பத்து பவுன் செயின் அது. அப்பாவுக்கு செயின் போடறது, வாட்ச் போடுற பழக்கம் இருக்காது. எம்ஜிஆர்க்காக அவரோட பெரிய டாலர் பொறிக்கப்பட்ட செயின் போட்டு இருந்தாரு. அதே மாதிரி சிவன் பக்தன்குறதுனால ருத்ராட்ச மாலை கழுத்துல போட்டுருந்தாரு. தினமும் அந்த செயின் என் கையில கொடுப்பாரு. அதை நான் ஒரு பெட்டியில் போடுவேன். போட்டு காலையில தினமும் அந்த மாதிரி எடுத்து அப்பா கையில கொடுத்துட்டு இருப்பேன்.

Images are subject to © copyright to their respective owners.

ஒரு நாள் நைட் வரும் போது என்கிட்ட செயினை குடுக்கல. நான் கேட்டா அதை நானே பெட்டிக்குள்ள் போட்டேன்னு சொன்னாரு. அம்மாவும், அப்பா அடுத்த நாள் கிளம்பி போகும் போது கழுத்துல செயினை பார்க்கல. என்கிட்டயும் குடுக்கலம்மா, அவரே வச்சிட்டு அவரே எடுத்துட்டு போயிட்டாரு, என் மேல ஏதாவது கோபமான்னு அம்மாகிட்ட கேட்டேன். அன்னைக்கு நைட்டு அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க, அப்புறமா டாலரை காணோம்னு சொன்னாரு.

அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு தான் அந்த டாலரை விவேக் ஓபராய்கிட்ட குடுத்தாருன்னு எங்களுக்கே தெரியும். விவேக் சாருக்கு அப்ப தெரிஞ்சிருக்கு. இருக்கிறதை கொடுக்குறோம்ங்குற விஷயத்தை தாண்டி, வீட்ல இருக்குறவங்களுக்கும் கோபமா, தப்பா மாறுறதுக்கு வாய்ப்பிருக்கிங்குற விஷயத்தை அம்மா கண்டிச்சி இருக்காங்க" என மகன் யுவன் தெரிவித்தார்.

Also Read | இசை அமைப்பாளர் தமனுடன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்.. பின்னணி என்ன?

பாலிவுட் நடிகருக்கு மயில்சாமி கொடுத்த தங்க செயின்.. அப்போ வீட்டுல நடந்தது இதான்.. மகன் OPEN TALK வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy gifts gold chain to vivek oberoi family reaction

People looking for online information on Mayilsamy, Mayilsamy son, Vivek, Yuvan Mayilsamy will find this news story useful.