தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், அவர் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
வரும் பொங்கலுக்கு ராதே ஷ்யாம் வெளிவருகிறது, தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ஒரு படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார் படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.
இப்போது, நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதளத்தில், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார், அதற்கு ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் ரன்பீர் கபூருடன் இன்னும் படமாக்கப்படாத Animal போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார்.
இது பிரபாஸின் 25 வது படமாகும், இது டி-சீரிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. சந்தீப் ரெட்டி வாங்கா தனது பத்ரகாளி பிக்சர்ஸ் பேனருடன் தயாரிப்பில் பங்குதாரராக இந்த படத்தில் இணைந்துள்ளார்.