பொன்னியின் செல்வனா? ஸ்பைடர் மேனா? வைரலாகும் சுஹாசினி மணிரத்னம் வெளியிட்ட புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார், இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அப்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு கேமரா தொழில் நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.  சண்டைகாட்சிக்கான படப்பிடிப்பில் கிராபிக்ஸ் காட்சிக்காக மேட் தொழில்நுட்பத்திற்காக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam ponniyin selvan update from shooting spot

People looking for online information on Mani Ratnam, Mani Ratnam - Madras Talkies, Suhasini Maniratnam, Vikram will find this news story useful.