"ஈடு செய்ய முடியாத இழப்பு".. பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் திடீர் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்', திரைப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை மந்திரா. பிறகு ' சாஹோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களைத் தாண்டி கிரிக்கெட் போட்டியின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கெளஷல் என்பவரை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர். 49 வயதான ராஜ் கெளஷல் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ராஜ் கெளஷல் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்களும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் ராஜ் கெளஷல்.  அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ் கௌஷல், “அந்தோணி கோன் ஹை, ஷாதி கா லாடூ, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Mandira Bedi’s husband, filmmaker Raj Kaushal, passes away

People looking for online information on Mandira bedi, RIP will find this news story useful.