“நீ மட்டும் ஓகே சொல்லு பிரியூஸ்”.. யாருய்யா அவரு!.. சூப்பர் சிங்கர்ல அடுத்த லெட்டர் சம்பவம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக சேனல்களில் சிறந்த பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றாகத் திகழ்கிறது விஜய் டிவி. ஆட்டம், பாட்டம், காமெடி, சீரியல்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக அளித்துவரும் விஜய் டிவி தம் நிகழ்ச்சிகளில் தனித்துவத்துடன் விளங்குகிறது.

Advertising
>
Advertising

Also Read | மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிட்டான ‘SVP’… பிரபல ஓடிடியில்… ரிலீஸ் தேதி Update

குறிப்பாக ஆடல் நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அதிலும் என்டர்டெயின்மென்ட்க்கு சற்றும் குறைவில்லாமல் வழங்குவதில் விஜய் டிவி முன்னணி இருக்கிறது. விஜய் டிவியின் பெரும் நிகழ்ச்சிகளான பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளிட்டவை ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சிகள் என்றால், இவற்றுக்கெல்லாம் மூத்த நிகழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சிங்கர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகத்திற்கு பல பாடகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் இன்றும் முன்னணி பாடகராக விளங்கி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மாகாபா ஆனந்த். அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் விஜே பிரியங்கா.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக சங்கர் மகாதேவன், எஸ்.பி.பி சரண் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வீட்ல விசேஷம் திரைப்பட புரமோஷனுக்காக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி இருவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் சிறுமி ரிஹானா பல பாடல்களை பாடி அசத்தி வருகிறார். கடந்த வாரங்களில் கமல்ஹாசனின் பாடலை அவரிடம் பாடி, அவரிடம் ரிஹானா பேசும் உரையாடல்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.

தற்போது ரிஹானா இந்த மேடையில் பாட, அப்போது மாகாபா ஆனந்த் பிரியங்காவுக்கு வந்ததாக சொல்லி ஒரு லெட்டரை பிரித்துப் படித்துக் காட்டுகிறார். அதில் பொள்ளாச்சியில் இருந்து ஒரு அண்ணாச்சி தமது ஆடு, மாடு, தோப்புகள் அனைத்தையும் பிரியங்காவுக்கு எழுதி வைப்பதாகவும், “நீ மட்டும் ஓகே சொல்லு பிரியூஸ்” என்று கொஞ்சலாகவும், சாம்பிளுக்கு ஒரு இளநீர் அனுப்பியுள்ளதாகவும் மா.கா.பா படித்து காட்ட அரங்கமே வெடித்து சிரித்தது. சூப்பர் சிங்கரில் இப்படி வேடிக்கையாக சித்தரிக்கப்பட்ட கடிதத்தை அவ்வப்போது மா.கா.பா நகைச்சுவையாக படித்து அரங்கத்தை மகிழ்விப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | அட.. 90s Kids-ன் ஃபேவ்ரைட் ஹீரோயின் சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா..? வைரல் புகைப்படம்.!

தொடர்புடைய இணைப்புகள்

MaKapa reads viral letter about Priyanka Super Singer

People looking for online information on Super Singer, Vijay Television, Vijay tv will find this news story useful.