தனலட்சுமிக்காக விக்ரமன்... ஷெரினாவுக்காக மகேஸ்வரி.. அனல் பறந்த வாதம்.. என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

முன்னதாக முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, சொந்த முடிவுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.

இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.

மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக மகேஸ்வரி, ADK, அசீம் உள்ளிட்ட போட்டியாளர்களிடமும் விக்ரமன் கேள்வி கேட்கிறார். இதனிடையே மகேஸ்வரியும் 'நேற்று ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டது பற்றி ஏன் கேட்கவில்லை?' என விக்ரமனிடம் முறையிடுகிறார். இதன் பின்னர் பேசும் அசீம், விக்ரமன் பெண்களுக்கு மட்டுமே ஆதரவு தருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இதனிடையே,  “தனலட்சுமியிடம் நீங்கள் அப்படி செய்தது தப்பு தான்” என அசீமிடம் மகேஸ்வரி எடுத்துக் கூறி விட்டு,`விக்ரமனிடம் தனலட்சுமி ஷெரினாவை தள்ளிவிட்டதற்கான விளக்கத்தையும் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், அது Accidental ஆக நடந்தது என கூறவே,  நீங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என்றும், உங்களிடம் Clarity இல்லை என்றும் மகேஸ்வரி தெரிவிக்கிறார்.

இதனையடுத்து, விக்ரமனிடம் பேசும் ஷெரினா, “என்னை தள்ளி விட்டார்கள். நீங்கள் தனலட்சுமி தள்ளவில்லை என பார்த்தீர்களா? எப்படி எனக்கு நடந்ததை பற்றி பேசாமல் போகிறீர்கள்?” என கோபத்தில் கத்தவும் செய்கிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், “தனலட்சுமியும் நீங்களும் விழுந்ததை நான் பார்த்தேன்.. ஆனால் அதற்காக தனலட்சுமியை அசீம் பிடித்து தள்ளியது தவறு அல்ல என்று ஆகிவிடாது” என்றும் தெரிவிக்கிறார். மேலும், அசீம் செய்ததை மகேஸ்வரி, ADK உள்ளிட்டோர் எளிதாக கடந்து போகிறார்கள் என்றும் விக்ரமன் குற்றம் சாட்டினார்.

ஷெரினா கீழே விழுந்ததன் பிறகு தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் நடந்து வரும் சம்பவங்கள் அதிகம் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. இவற்றுக்கான முடிவுகள் ஆவணங்களுடன் இந்த வார இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் குறும்படமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Maheswari and sherina question vikraman he explained

People looking for online information on BIGGBOSS TAMIL, Maheswari, Sherina, Vikraman will find this news story useful.