பிக் பாஸ் ஆரியின் THORWBACK ப்ரொபோஸல் SCENE.. இந்த படத்துலயா? ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகெங்கிலும் உள்ள காதலர்களுக்கு பிப்ரவரி மாதம் என்பது மிக மிக ஸ்பெஷலான ஒரு மாதமாகும். பிப்ரவரி 14 ஆம் தேதி உலகிலுள்ள காதலர்கள் Valentines Day தினத்தை மிகவும் அசத்தலாக கொண்டாடுவார்கள்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

புதிதாக காதலை ஒருவரிடம் வெளிப்படுத்துவதற்கும், ஏற்கனவே உருவான காதலை இன்னும் மெருகேற்றி கொண்டு செல்வதற்கும் மிகச்சிறந்த நாளாகவும் பிப்ரவரி 14 ஆம் தேதி பார்க்கப்படுகிறது. இந்த தேதிக்கு முன்பு ரோஸ் டே, ப்ரோபோசல் டே என நிறைய நாட்கள் இருந்தாலும், இந்த காதலர் தினத்திற்கு என்றுமே ஒரு ஸ்பெஷல் இடமுண்டு.

தற்போது பிப்ரவரி 14-ஆம் தேதி நெருங்கி வரும் சூழலில், எப்படி இந்த நாளில் தங்களின் காதலை வெளிப்படுத்தலாம் என்றும் புதிதாக என்ன பரிசை அளிக்கலாம் என்பது குறித்தும் பலரும் தற்போதே ஏராளமானோர் யோசனையில் ஆழ்ந்திருக்கக் கூடும்.

அதே வேளையில், இதுவரை சினிமாக்களில் வெளியான காதல் காட்சிகள் தொடர்பான வீடியோக்களும் கூட காதலர் தினத்தில் சமூக வலைத்தளங்களில் வட்டமிடுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஒரு மனதை உருக வைக்கக்கூடிய காதல் வெளிப்படும் காட்சி குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தான் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நாராயண் நாகேந்திரன் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "மாலை பொழுதின் மயக்கத்திலே". இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரி நாயகனாக நடித்திருந்தார். சுபா புட்டேலா நாயகியாக நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி இருந்தது. அதே வேளையில், இந்த படத்தில் நாயகி சுபா புட்டேலா தன்னுடைய காதலை ஆரியிடம் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய காட்சியும் மனதை நெகிழ வைக்கக்கூடிய வகையில் இருக்கும்.

மழையில் ஆரி நனைந்து கொண்டு நிற்க, அவர் அருகே வரும் நடிகை சுபா புட்டேலா, "15 வருஷத்துக்கு அப்புறம் என் பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பும் போது ரெண்டு மணி நேரம் அன்னைக்கி காஃபி ஷாப்ல ஒருத்தன் கூட டைம் Spend பண்ணோமே அவன் கூட வாழ்க்கையை வாழ்ந்திருந்தா எப்படி இருக்கும்ன்னு யோசிக்குறதுக்கு விருப்பம் இல்லை.

Images are subject to © copyright to their respective owners

எனக்கு தெரியல என்ன பண்றதுன்னு, எனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரி உன்னை அழவிட்டு, எதுவும் சொல்லாம எனக்குள்ள நானும் அழுது வாழணும்னு எந்த எண்ணமும் வச்சுக்க விருப்பமில்லை. ஒருத்தர் ஒருத்தர் டெய்லி பார்த்து பேசினாலே சரி வர்றதில்லை. சரி எல்லாத்தையும் மறந்துட்டு சிட்னி போனா படிப்ப விட்டுட்டு உன்ன பத்தி யோசிச்சிட்டு இருப்பேனோன்னு பயமா இருக்கு" என உருக்கமாக கூறுவார்.

Images are subject to © copyright to their respective owners

இந்த வசனத்தில் காதல் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் எங்குமே வராமல் நாயகன் மீதான காதலை அப்படியே வெளிப்படுத்தி இருப்பார் நாயகி. பல காதல் காட்சிகள் தற்போது ட்ரெண்ட் ஆகும் அதே வேளையில், இந்த காதல் காட்சிகளும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இதனிடையே, நடிகை சுபா புட்டேலா தற்போது உயிருடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Maalai Pozhudhin Mayakathilaey Aari and Shubha love scene

People looking for online information on Aari, Love Proposal, Maalai Pozhudhin Mayakathilaey, Shubha phutela, Valentines Day will find this news story useful.