EXCLUSIVE : ''SPB-ன் கடைசி ரெக்கார்டிங்.. அப்போது சொன்ன ஒரு விஷயம்..'' - அண்ணாத்த INTRO SONG SECRETS.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பி கடைசியாக அண்ணாத்த படத்தில் பாடியது குறித்து பாடலாசிரியர் விவேகா மனம் திறந்து பேசியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி கடைசியாக பாடிய ரஜினியின் அண்ணாத்த இன்ட்ரோ பாடல் குறித்து பாடலாசிரியர் விவேகா மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''ரஜினி சாருக்கு நான் பாடல் எழுதுவது இதுவே முதல்முறை. அந்த பாடலை எஸ்.பி.பி சார் பாடுவதை பார்க்கவே ரெக்கார்டிங் சென்றேன். அப்போது ஒரு குறிப்பிட்ட வரியை பாடும் முன்னர் என்னை அழைத்த அவர், கண்டிப்பாக இந்த வரிகள் பெரிய அளவில் பேசப்படும்'' என கூறினார் என விவேகா தெரிவித்தார். 

மேலும் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்ட நினைவுகள் மற்றும் இன்னும் எஸ்.பி.பி குறித்து பல்வேறு விஷயங்களை பாடலாசிரியர் விவேகா பகிர்ந்து கொண்ட முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

EXCLUSIVE : ''SPB-ன் கடைசி ரெக்கார்டிங்.. அப்போது சொன்ன ஒரு விஷயம்..'' - அண்ணாத்த INTRO SONG SECRETS. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பியின் கடைசி பாடல் பற்றி தகவல் | Lyricist Viveka opens on SPB's last song in rajini's annaatthe

People looking for online information on Annaatthe, Annaatthe Intro Song, Rajinikanth, SPB, SPB Last Song, Viveka will find this news story useful.