கவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. பிரபல இயக்குநர் வேண்டுதல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராகவும் கவிஞராகவும் வலம் வருபவர் வைரமுத்து. இவர் தனது பாடல் வரிகளுக்காக 7 முறை தேசிய விருதையும், என்னற்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். 

இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில், இதய நோய் பிரச்சனைக்காக, அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இயக்குநர் சீணு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்'' என வேண்டி பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி | lyricist vairamuthu hospitalised in chennai appolo hospital

People looking for online information on Seenu ramasamy, Vairamuthu will find this news story useful.