"அவளை மறக்கத் தான்".. ஆதித்த கரிகாலனாக மாறி DIALOGUE பேசிய சிறுவன்.. விக்ரம் பகிர்ந்த CUTE வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படங்களை இயக்கி உள்ளார் மணிரத்னம்.

Advertising
>
Advertising

Also Read | விஷூவல் அனுபவத்துக்காக கூடுதல் பணி... தள்ளி போகும் பிரபாஸின் ஆதி புருஷ்.!

இரண்டு பாகங்களாக திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவில் காண ஏராளமானோர் ஆவலுடன் இருந்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு மணிரத்னம் மூலம் அதுவும் நனவாகி இருந்தது. இதனால், பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரை அரங்குகளில் கூடினர். மேலும், உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன் 1, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீதும் தற்போதே உச்சகட்ட எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்திருந்தார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்தனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்தனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்தனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்தனர்.

அனைவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்த நிலையில், படத்தில் வரும் வசனங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி இருந்தது. அதிலும் குறிப்பாக, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரம், "அவளை மறக்கத் தான்," என பேசும் ஒரு வசனம் வரும். இந்த வசனம் பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், ஒரு சிறுவன் இந்த வசனத்தை பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விக்ரம் பகிர, தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது. அந்த வீடியோவில், மிக அழகாக ஆதித்த கரிகாலன் வசனத்தை அந்த சிறுவன் பேசுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம், "மழலை ஆதித்த கரிகாலன்!! pinnriyae’பா!!💛" என குறிப்பிட்டுள்ளார்.

மழலை மொழியில் 'பொன்னியின் செல்வன் 1' திரைப்பட வசனத்தை சிறுவன் பேசும் வீடியோ, லைக்குகளை அள்ளி வருகிறது.

 

Also Read | KAMAL HAASAN : இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர்.. இது ஆண்டவர் BIRTHDAY ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Little boy speak aditya karikalan vikram dialogue from ponniyin selvan 1

People looking for online information on Aditya Karikalan, Aditya karikalan vikram dialogue, Little boy, Little boy speak aditya karikalan dialogue, Ponniyin Selvan 1, Vikram will find this news story useful.