போகும் வழியில் புனித் ஃபோட்டோவை பார்த்ததும் குழந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்.. வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் சகோதரருமான புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடைப்பால் காலமானார்.

Advertising
>
Advertising

கர்நாடகாவின் பெங்களூருவில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து புனித் ராஜ்குமார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய மறைவை அடுத்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு தொடர்ச்சியாக இரங்கல்களை தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் அவருடைய இழப்பை தாங்க முடியாத அளவுக்கு மருத்துவமனை முன் நின்றும், பிறகு புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கின்போதும் கதறி அழுதனர்.

திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களையும் சமூக செயல்பாடுகளையும் முன்னெடுத்திருந்த புனித் ராஜ்குமார், இறந்த பின் தன்னுடைய கண்களை தானம் செய்வதற்கும் கூட ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி வருவதை காணமுடிகிறது.

இதனிடையே ரயில்வே ஸ்டேஷனில் நடந்து செல்லும் ஒரு சிறிய குழந்தை ஒன்று நடந்து செல்லும் வழியில், புனித் ராஜ்குமாரின் போட்டோவை பார்த்து விட்டு திடீரென அங்கு சென்று புனித் ராஜ்குமாரின் போட்டோவை தொட்டு முத்தமிட கூடிய காட்சிகள் அடங்கிய உருக்கமான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

போகும் வழியில் புனித் ஃபோட்டோவை பார்த்ததும் குழந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்.. வீடியோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Little baby kisses puneeth rajkumar photo heartmelt video

People looking for online information on Puneeth, Puneeth rajkumar, PuneethRajkumar, RIPPuneeth, RIPPuneethRajkumar will find this news story useful.