பிரதமர் மோடியின் சமீபத்திய நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பிய எஸ்.பி.பி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரபலங்கள் அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமன்யம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ராமோஜி ராவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவரால் தான் பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துகொள்ள முடிந்தது.

நிகழ்வு இடம் பெறும் இடத்துக்கு சென்ற போது எங்களது செல்போன்களை பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கிக்கொண்டு, அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால் அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இதனை பகிர்ந்த 'கோமாளி' பட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன்,'' 2020 வந்துருச்சு, இன்னும் எதுவும் மாறல .. இன்னும் எவ்ளோ நாளைக்குனு பாப்போம் '' என்று கருத்து தெரிவித்துள்ளார். .

தொடர்புடைய இணைப்புகள்

Legendry Singer SPB Questioned about Prime Minister Modi

People looking for online information on Narendra Modi, SP Balasubramaniam will find this news story useful.