இந்த வருஷம் இத்தனை பேர் மாறிட்டாங்களா? சீரியலை விட்டு விலகிய நடிகர் நடிகைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பல சீரியல் நடிகர், நடிகைகள் மாற்றப்படுவது உண்டு. அந்தவகையில், இந்த வருடம் முக்கியமான சீரியல்களில் இருந்து மாற்றப்பட்ட நடிகர்களும் மற்றும் சீரியல்களில் இருந்து விலகிய நடிகர்களை ஒரு சிறிய லிஸ்டை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertising
>
Advertising


பாரதி கண்ணம்மா

இந்த லிஸ்டில் முதலில் இருப்பது விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா தொடர். பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினிக்கு, பல பட வாய்ப்புகள் கிடைத்தும், அதை எல்லாம் விட்டு விட்டு தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரை பின்தொடர்ந்த சினிமா வாய்ப்பு அவரை அந்த சீரியலில் இருந்து விலக வத்துவிட்டது. இந்த சீரியலுக்காக ஜெய்பீம் மற்றும் சார்பட்டா பரம்பரை பட வாய்ப்பை அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாக்கியலட்சுமி

அதேபோல் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கக் கூடிய தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரின் ராதிகா என்ற கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஜெனிஃபர் இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். குழந்தை பிறப்பு காரணமாக இந்த சீரியலை விட்டு விலகிய ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா அந்த இடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பெரும் உற்சாகத்தில் Hiphop தமிழா ஆதி! காரணம் யுவன் சங்கர் ராஜா & சந்தோஷ் நாராயணன்! முழு தகவல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

அடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா, அந்த தொடரை விட்டு வெளியேறினார். அவருக்கு இருக்கும் சரும பிரச்சனை தான் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் என்று பலரும் கூறி வந்தனர். இப்போது ஈரமான ரோஜாவே இத்தொடரில் நடித்துக் கொண்டிருந்த சாய் காயத்ரி என்பவர் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலிருந்து நடிகை ரக்ஷிதா விலகியுள்ளார். தனது கதாபாத்திரம் அந்த தொடரில் வலுவாக இல்லாததால், அந்த தொடரில் இருந்து தான் விலாகியதாக கூறியிருந்தார். ரக்ஷிதாவுக்கு பதிலாக அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்த  மோனிஷா தற்போது மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சித்தி

சன் டிவியில் பல முக்கியமான சீரியல்கள் இருந்தாலும் சித்தி தொடர் மிகவும் ரசிகர்களால் கவரப்பட்டது. சித்தி சீரியல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ராதிகா சரத்குமார் தான். அந்த வகையில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வந்த ராதிகா, சித்தி 2 சீரியலிருந்து அதிரடியாக விலகினார். அதற்கான காரணத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்தார். அந்த தொடரில் சாரதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரோஜா

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷாமிலி, கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இத்தொடரை விட்டு விலகினார். தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கிறார்.

வானத்தை போல

அடுத்து வானத்தைப்போல என்ற சன் டிவி தொடரில் அண்ணன் தங்கையாக நடித்துக்கொண்டிருந்த தமன் மற்றும் சுவேதா இருவரும்,இந்த தொடரை விட்டு  விளக்கியுள்ளனர். ஸ்வேதாவுக்கு பதிலாக துளசி என்ற கதாபாத்திரத்தில் மான்யா நடித்துக்கொண்டிருக்கிறார். அண்ணனாக நடிக்கும் சின்ராசு கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடிக்கப் போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Leading actors who left the serial this year

People looking for online information on சித்தி, சீரியல், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ரோஜா, Serial will find this news story useful.