#SHOCKING : "இனி என்னால் முடியாது" - பிரபல 'புட்ட பொம்மா' பாடகர் கொடுத்த அதிர்ச்சி... பின்னணி என்ன??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜனவரி மாதம் வெளியான 'புட்ட பொம்மா' பாடல் பட்டித் தொட்டி எங்கும் சக்கைப் போடு போட்டது. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே போட்ட அந்த 'ஸ்டெப்' செம வைரல் ஆனது. டிக்டாக்கில் நம்மூர் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அந்தப் பாட்டை பாடாய் படுத்தி விட்டார்கள். சந்தேகமே இல்லாமல் இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் அந்த பாடல்.

இந்தப் பாடலை பாடகர் 'அர்மான் மாலிக்' பாடி இருந்தார். இவருக்கு சமூக வலைதளத்தில் மட்டும் 8 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் 'தாதாசாகெப் பால்கே' விருது பெற்றார்.

இந்நிலையில் அவர் எடுத்திருக்கும் ஒரு முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இனி என்னால் முடியாது" என்று ஒரு பதிவை போட்டு அவரது முந்தைய பதிவுகளை உடனடியாக டெலிட் செய்துவிட்டார்.

இதனால் ஷாக் ஆன அவரது ரசிகர்கள், இந்த தீடீர் முடிவிற்கு காரணம் கேட்டு அந்த பதிவிற்கு கீழ் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதுவரை அர்மான் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

புட்ட பொம்மா பாடகர் அர்மான் மாலிக் கொடுத்த ஷாக் செய்தி l Butta Bomma Singer Armaan Malik Takes A Sudden Desicion In Instagram

People looking for online information on Ala Vaikunthapurramloo, Allu Arjun, Armaan Malik will find this news story useful.